ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday 25 February 2010

சந்தையில வாங்கி வந்த..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'சந்தையில வாங்கி வந்த சரி ஜோடி காளைகளா..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, ஒரு கிராமத்து இளைஞனின் காதலை, அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அழகை மிக அழகாகப் பாடுகிறார்... அதுவும் அந்த இளைஞன் அவனது காளைகளுடன் பேசிக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இப்பாடல்.!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!




சந்தையில வாங்கி வந்த... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர் 




Monday 22 February 2010

ஆத்து மணலிலே கோட்டை கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'ஆத்து மணலிலே கோட்டை கட்டி..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிக அழகாகப் பாட, அதை அப்படியே அவரது பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுகிறார்கள், மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல்... போகப் போக துள்ளலிசைப் பாடலாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன் கலந்த துள்ளலிசைப் பாடலாக... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!


ஆத்து மணலிலே கோட்டை கட்டி... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Thursday 18 February 2010

அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..!'

எப்பாடலிலும் பாடகர் பாடியதைத்தான், பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுவார்கள்... இப்பாடலில் அப்படியில்லை... பாடகர் பாடுவதை குழுவினர் பாடுவர், பின் குழுவினர் பாடுவதை பாடகர் பாடுவார்...துள்ளலிசையின் ஆரம்பிக்கும் பாடல்... போகப் போக துடிப்பான இசையாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டுப் பாருங்க... அப்புறம் சொல்வீங்க..!


அறிவோம் நன்றாக..! | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்.



Tuesday 16 February 2010

தமிழா... நீ பேசுவது தமிழா..! - தமிழிசைப் பாடல்!


தமிழா... நீ பேசுவது தமிழா..! என்ற பாடல்தான் இது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடல் இது, இசையமைத்து, பாடியிருப்பவர் நம் கலைமாமணி திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்...

இப்பாடலில் ஆங்கில வார்த்தைகள் எப்படி நம் தமிழை சிதைத்து ஊடுருவியுள்ளன என்பதை கவிஞர் கோபத்துடன் எழுதியுள்ளார், அதை அப்படியே தம் குரலில் பிரதிபலித்துக் காட்டியுள்ளார் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்..!

அன்பு நண்பர் அமுதநேசன் அவர்கள் மின்னஞ்சல் மூலம் என்னிடம் வேண்டுகோள் விடுத்த பாடல்தான் இந்த 'தமிழா... நீ பேசுவது தமிழா..! எனும் பாடல்.

இந்த பாடலை மிகத் தாமதமாக வழங்குவதற்கு மன்னிக்க வேண்டும் அமுதநேசன்... எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும், இப்பாடலை எனக்கு வழங்கிய நண்பர் தமிழ் சாந்த குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்...

இப்படலை கேட்டுப் பாருங்கள்... வேண்டுவோர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்..!

இதோ அப்பாடல்...


தமிழா... நீ பேசுவது தமிழா..! | Music Upload

-------------------------
Hi

Pl help me download the song "TAMIZHA NEE PESUVATHU TAMIZHA" sung by thenisai Chellappa and written by kasi Ananthan.

I visited your blog and found it very informative and useful. Pl continue the good work.

Regards

S J Amuthanesan



Sunday 14 February 2010

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… - திரைப் பாடல்


‘சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… உன்னை நெஞ்சில் வச்சிகிட்டேன்..!’
எனை நேசித்துக் கொண்டிருக்கும் என்னுடைய கவிதைக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது…

நாங்களிருவரும் நேசித்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் சேர்ந்து வாழ்கின்ற சூழல் இன்னும் அமையவில்லை… ஆதலால் இன்னொரு ஜென்மம் எடுத்தேனும் உனக்காக காத்திருப்பேன் என என்னவள் என்னிடம் கூறினாள்… இப்பாடலின் வழியாக..! உப்படாலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உன் நினைவுதானடா என்றாள்..!

இப்பாடல் இடம் பெற்ற படம்: தாஸ், பாடியவர்கள்: ஹரிஹரன் மற்றும் ஸ்ரேயா கோஷல், இசை: யுவன் சங்கர் ராஜா

என்னவளுக்காகவும், எனக்காகவும் எங்களைப் போன்ற காதலர்களுக்காகவும் இக்காதலர் தினத்தில் இப்படாலை பதிவிலிடுகிறேன்… கேட்டு மகிழுங்கள்..!


சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்... | Upload Music

(உலக காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்…




Tuesday 9 February 2010

புது ரூட்டுலதான்..! - கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்..!



ஏழிசை மன்னர், கான தேவன் கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்று ..!

சீயான் என்று அழைக்கப்படும் விக்ரம் அறிமுகமான முதல் படம் மீரா, அப்படத்தில் இடம்பிடித்த பாடல் தான் 'புது ரூட்டுலதான்..!' பாடல்


பாடலின் வரிகள் அத்தனையும் முத்துக்கள்தான்... இசைஞானி இளையராஜாவின் இசைத் தாலாட்டில், கான தேவனின் மயக்கும் குரலில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்...


யேசுதாஸ் மற்றும் அவரது குழுவினரும் இப்பாடலில் தனி ஆவர்த்தனமே செய்திருப்பார்கள்... கேட்டுப் பாருங்க..!



புது ரூட்டுலதான்..! | Music Upload

இப்பாடலின் திரைவடிவம் இதோ