ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday 31 May 2010

நூலுமில்லை வாலுமில்லை..! - திரைப்படப்பாடல் (நேயர் விருப்பம்)

'' நூலுமில்லை வாலுமில்லை..? வானில் பட்டம் விடுவேனா..?'' என்ற பாடல் இன்று நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது...

டி. ராஜேந்தரின் இயக்கத்தில், 1981-ல் வெளிவந்த 'இரயில் பயணங்களில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த பாடல்...

சோகப்பாடலாக இடம்பெற்ற இப்பாடலைப் பாடியவர். திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான்.

காதல் தோல்வியின் வலியினை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்...

''பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
..''

''வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!




நூலுமில்லை வாலுமில்லை..! | Music Codes


--------

கிறுக்கல் கிறுக்கன் said...
நன்றிகள் பல நண்பரே,எனக்காகவே பாடலை வெளியிட்டமைக்கு. மேலும் ஒரு பாடல் தேவை, அது ”வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே” என துவங்கும் பாடல்




Wednesday 26 May 2010

எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்...! - பழைய திரைப்படப் பாடல்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) என்கிற 'கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் 'பணம்'. 1952-ல் வெளியான இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல பணத்தை பற்றி ஒரு பாடலை எழுதினார் என்.எஸ்.கே.

அப்பாடல்தான் இன்று நான் பதிவிலிடப் போவது... "எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?"

இப்பாடலை பாடியதும் இவர்தான்... இசையமைப்பு யாரென்று கேட்கிறீர்களா..? இசைச் சக்ரவர்த்திகளான எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி ஆகியோர்...

இப்பாடலின் வரிகளத்துனையும் வைரங்களாகும்... உதாதரணத்திற்கு

அரசியல்வாதிகள் முதல் அரசு உயரதிகாரிகள் வரை கறுப்புப் பணம் வைத்திருப்பதை...

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? - என்றும்

போலிச்சாமியார்களின் பித்தலாட்டங்களை

சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? - என்றும்

ஏழைகளிடம் இல்லாமல்... பணக்காரார்களிடம் இருப்பதையும்... தேர்தலில் விளையாடுவதையும்...

இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ? - என அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுவார்... இந்த வரிகள் இன்றைக்கு மட்டுமல்ல... என்றைக்கும் பொருந்த்மல்லவா..?

(இப்படத்தின் கதையை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. இப்படத்தில் நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், பத்மினி, என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் ஆகியோர்...)

--

அன்பு நண்பர் ஆனந்தபாலன் அவர்களே... உங்கள் அவாவை பூர்த்தி செய்ய வருகிறது இப்பாடல்...

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


எங்கே தேடுவேன்...பணத்தை...! | Music Upload

---------
Delete

அருமையான பாடல் பகிர்வுகள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடல்கள் கிடைக்குமா நண்பரே
12 May 2010 14:08
Delete




Tuesday 11 May 2010

பசுமை நிறைந்த நினைவுகளே..! - பழைய திரைப்பாடல் (நேயர் விருப்பம்)

'பசுமை நிறைந்த நினைவுகளே..பாடித் திரிந்த பறவைகளே..!' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா..? கல்லூரிப் படிப்பை முடித்துச் செல்லும் நண்பர்களின் பிரிவை இப்பாடலில் கேட்கலாம்.

1963-ல் வெளிவந்த ரத்தத் திலகம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார். இசையமைத்தவர் திரையிசைத் திலகம். திரு. கே.வி. மகாதேவன் அவர்கள். டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா ஆகியோரின் கானக் குரல்களில் இப்பாடலைக் கேட்பது ஒரு தனி சுகம்.

இந்த பாடல் பழைய பாடலாக இருந்தாலும், இன்று கேட்டால் கூட எல்லோருக்கும் அவரவர்களின் கல்லூரிக் காலத்து பழைய நினைவுகளைக் கொண்டுவரும்

''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளேபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


பசுமை நிறைந்த நினைவுகளே..! | Musicians Available


---------------

//Blogger கிறுக்கல் கிறுக்கன் said...
உமது சேவை அருமை தோழரே, உமது கடமை உணர்வு வாழ்க.

என்க்காக ஒரு பாடல் வெளியிடுவீர்களா. எனக்கு அந்த பாடலின் முதல் வரி ஞாபகத்தில் இல்லை. ஒரு கருப்பு வெள்ளை படம் , கல்லூரி பிரிவினை குறித்த பாடல், நடுவே “குரங்குகள் போல மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே” என்ற வரிகள் வரும்
4 May 2010 18:54 //