டி. ராஜேந்தரின் இயக்கத்தில், 1981-ல் வெளிவந்த 'இரயில் பயணங்களில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த பாடல்...
சோகப்பாடலாக இடம்பெற்ற இப்பாடலைப் பாடியவர். திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான்.
காதல் தோல்வியின் வலியினை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்...
''பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே ..''
''வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!
அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!
நூலுமில்லை வாலுமில்லை..! | Music Codes
--------
- நன்றிகள் பல நண்பரே,எனக்காகவே பாடலை வெளியிட்டமைக்கு. மேலும் ஒரு பாடல் தேவை, அது ”வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே” என துவங்கும் பாடல்