ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday 30 March 2011

நாடே இதயம் எங்கள் நாடே உதிரம்..! - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சிறப்பு பாடல்


1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய 'நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்...' என்ற பாடலை இன்று சிறப்புப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

இன்று 2011 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் நமது பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.

இப்பாடலை எழுதியவர், இசையமைத்தவர் யார் என்ற விபரத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவருடைய கணீர்க் குரலில் இப்பாடல் நமது நாடி நரம்புகளை முறுக்கேற்றும்...

இந்தியா கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே 120 கோடி மக்களின் ஆசை. அதில் கிரிக்கெட் தனியிடம் பெறுகிறது. இந்த உலகக் கோப்பையினை வெல்ல இந்திய அணிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

சாதனை நாயகன் சச்சினுக்கு சாதனை மகுடம் சூட்ட இந்த போட்டி நிச்சயம் உதவும்.. இந்தியா கோப்பையை வெல்லும். வெல்க இந்தியா வெல்க..!

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நாடே இதயம்..! | Upload Music

சிறப்புத் தகவல்கள்

@பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்தவர். 


@இந்த பாடல் 1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த, ஜெயா தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.




Monday 28 March 2011

வந்தா வராண்டி..! மதுரை சுண்ணாம்புதாண்டி..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'சந்திரரே சூரியரே... சாமியே என் துரையே... என்ன சொல்லி கூப்பிடட்டும்...... வந்தா வராண்டி... மதுரை சுண்ணாம்புதாண்டி..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

வந்தா வராண்டி.. மனுசன் போனா போறாண்டி... என்ற சந்தத்தோடு பாடலின் வரிகள் ஒலிக்க, உறுமி மேளமும் நையாண்டி மேளமும் நையப்புடைக்க, சலங்கை ஒலி நம்மை ஆட வைக்க, நாதஸ்வரம் நம்மை தலையசைக்க வைக்கிறது...

அட பாட்டை கேட்டுப் பாருங்க... நீங்க ஆடலன்னா ஏன்னு கேளுங்க... நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடலிது. 'எலுமிச்சம் பழம் சிவப்பு.. அட இஞ்சிமுறப்பா ஒரப்பு..' என்ற பிரபல வரிகள் இந்த பாடலில்தான் இருக்கிறது.

அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பாடாலான 'ஆத்தோரம் கொடிக்காலாம்.. அரும்பரும்பா வெத்திலையாம்..' என்ற பாடலின் நான்கு வரிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


சந்திரரே சூரியரே..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Saturday 26 March 2011

விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! - பரவை முனியம்மாவின் கிராமியப் பாடல்


பறவை முனியம்மாவின் கணிர் குரலில் 'வெரட்டிவெரட்டி பிடிக்கும் போது என்ன சொல்லுமாம் கோழிக் குஞ்சு' என்ற கிராமியப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

கோழியையும், கோழிக் குஞ்சியையும் வைத்து பரவை முனியம்மா அவர்கள் இப்பாடலைப் பாடியிருக்கும் விதமும், இதற்கான நமது கிராமத்து இசைகளும்.. அடடா நம்மை ஆட வைக்காமல் விடாது என்றுதான் சொல்ல வேண்டும்.

நையாண்டி மேளமும், நாதஸ்வரமும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கும். பரவை முனியம்மாவுடன் பாடும் கோரஸ் குரல்களும் சளைக்கவில்லை. இவர் பாடி முடித்ததும், அதற்கு பின்னிசையாக நாதஸ்வரமும், மேளமும் தாளம் தப்பாமல் பின்னியெடுக்கிறது.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட அன்பு நண்பர் திரு. ரமேஷ் அவர்களுக்கு எனது நன்றி. அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். இப்பாடல் உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! | Upload Music

நன்றி: பரவை முனியம்மா & குழுவினர்

-------------------------------------------------------

Ramesh said...
indha websitil erendu padalgalai keten migunda maghilchi. enudaya laptopil tamil version illai adalal ennai manikkavum. en virupa padalaga PARAVAI MUNIYAMMA padiya padal 'VERATI VERATI PUDIKUMBODHU ENA SOLUMMA KOZHIKUNJU' endra padalai ketka migunda assai mudinthal tharavum.

Ramesh
17 December 2010 21:37




Friday 18 March 2011

வீடு வரை உறவு..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி...' என்ற காலத்தால் அழிக்க முடியா தத்துவப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.

ஜூலை 14, 1962 -ல் வெளியான பாதகாணிக்கை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிது. இப்படத்தினை இயக்கியவர் கே. சங்கர். மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், கவியரசு கண்ணதாசனின் அமர வரிகளில், டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சிய மயமான குரலில் ஒலிக்கிறது இப்பாடல்.

இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் அண்ணனாக வரும் அசோகன் அவர்கள் ஒரு கால் இல்லாமல், இரு கை கட்டைகளை ஊன்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகும் போது பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும்... இப்பாடலின் வரிகளை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன..?

எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் டான் சமுசா அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த இந்த தத்துவப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


வீடு வரை உறவு...! | Online Karaoke
---------


Anonymous Don Samusa said...

எனக்கு பிடித்த பாடல் ஒன்று, அதன் வரிகள் எனக்கு நினைவில்லை...

அதில் அசோகன் அவர்கள் ஊனமுற்ற வேடத்தில் கடலை நோக்கி


சென்று கொண்டே பாடுவார்...

அந்த பாடலை எப்படியாவது அனுப்புங்கள்...
2 March 2011 14:15
--------------------------------

இனி சில சுவாரசியத் தகவல்கள்

@ பட்டினத்தாரின் பாடலிருந்து இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் உருவாக்கினார்.

மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வௌளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே

மற்றும்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக 
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே

இந்த இரண்டு பாடலும் பட்டினத்தார் எழுதியதே. இரு பாடலும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. 

இதன் பொருள் என்னவெனில், செல்வமும் உறவும் வருவது வீடுவரைதான். கதறி அழும் மனைவி வருவது வீதி வரைதான். அடித்துக் கொண்டு அழும் பிள்ளையின் விஜயம் சுடுகாடு மட்டும்தான். ஆனால் கடைசி வரை கூட வருவது செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான் என்றார் பட்டினத்தார்.



கண்ணதாசன் இதைத் தழுவி எழுதிய இப்பாடலில் கடைசி வரியான 'பாவமும் புண்ணியமும்தான் கடைசிவரை கூடவரும்' என்ற வாக்கியத்தை விட்டு விட்டார். இதைப்பற்றி நண்பர் ஒருவர் வினவியதற்கு கண்ணதாசன் சொன்ன பதில் “அப்படி ஓர் அருமையான வாக்கியத்தை சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு. அதனால் தான் அதைப் பாடலில் குறிப்பிடவில்லைஎன்றார். 

@ உலக நாயகன், பத்மஸ்ரீ கமலஹாசன் (குழந்தை நட்சத்திரமாக) நடித்த மூன்றாவது படம் இது.

@ இப்பாடலில் வரும் பெண் குரல் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலாகும். இவருடைய உண்மையான பெயர் எல். ராஜேஸ்வரி ஆகும்.

கோரஸ் பாடிக் கொண்டிருந்த இவரை முதன் முதலில் 'நல்ல இடத்து சம்பந்தம்' படத்தில் இவருக்கு 4 பாடல்களை கொடுத்து பாடகியாக்கினார்  அப்படத்தின் இசையமைப்பாளரான கே.வி. மகாதேவன்.

டைட்டிலில் பெயர் போடும் போது குழப்பம் வந்தது. ஏற்கனவே எம். ராஜேஸ்வரி என்ற பெயரில் ஒரு பாடகி இருந்ததால், இவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி என பெயர் மாற்றினார் இப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.பி.நாகராஜன்.




Saturday 5 March 2011

சிங்கார வேலனே தேவா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)



கொஞ்சும் சலங்கை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே தேவா...' என்ற அற்புதமான பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

நவம்பர் 14, 1962 அன்று வெளியான இப்படத்தினை தயாரித்து, இயக்கியவர்  திரு. எம்.வி.இராமன் அவர்கள். இசைமேதை எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்பாடலின் வரிகளை கு.மா.பாலசுப்ரமணியம் எழுதிக் கொடுக்க, குரல் வழியே உயிர் கொடுத்தவர் எஸ். ஜானகி அவர்கள். இப்பாடலில் நாதஸ்வரம் மிக முக்கியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த நாதஸ்வர இசையின் இப்பாடலுக்கு வாசித்தவர் பிரபல நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள்.

எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் திரு. தாம்ஸ் அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



சிங்கார வேலனே தேவா..! | Musicians Available


------------------------------

Anonymous Dhams said...



Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I like to hear old songs .plz send me the song "SINGARA VELANE DEVA" from KONJUM SALANGAI and "THUKAMUM KANKALAI THALUVATUMEY " SONG.

THANK YOU
13 February 2011 11:46
----------------------------------
இப்பாடல் குறித்த சில தகவல்கள்

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு! என்று நாமெல்லாம் கிண்டல் பண்ணுவோமே... அந்த புகழ் பெற்ற டயலாக் இடம் பெற்ற பாடல் இதுதான்.

இப்படத்தின் நாயகி சாவித்திரி முதலில் ஒரு வரிதான் பாடுவார்... அதைக் கேட்ட ஜெமினி கணேசன் அந்த வரியை நாதஸ்வரத்தில் வாசிப்பார். அதைக் கேட்டதும் சாவித்திரி பாடாமல் நிறுத்தி விடுவார். பாடியது யாரென்று பார்க்கும் நோக்கில் ஜெமினி சாவித்ரியைப் பார்க்க வருவார்.. உட்கார்ந்திருக்கும் சாவித்திரி ஜெமினியைக் கண்டதும் எழுந்து விடுவார்... அப்போது

ஜெமினி: சாந்தா உட்கார்...
ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்...
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்க்கு ஓடோடி வந்த என்னை 
ஏமாற்றிவிடாதே சாந்தா...

சாவித்திரி: என்னங்க, உங்கள் நாதஸ்வரத்திற்கு முன்னாள்..?

ஜெமினி: தேனோடு கலந்த தெள்ளமுது, 
கோலநிலவோடு சேர்ந்த குளிர்தென்றல்,
இந்த சிங்கார வேலன் சந்நிதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்
பாடு சாந்தா பாடு..!

இதுதான் அந்த டயலாக்கோட முழுவிபரம்..!

@ இப்பாடலில் ஒரு பல்லவி ஒரு சரணம் மட்டுமே மேலோங்கி நிற்கும்.. மீதமெல்லாம் சங்கீத தாள வரிகளான.. சரிகமப.... சரி நித ப... போன்ற சங்கீத மொழிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும்... கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.

@இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, இப்பாடலில் இடம் பெற்றுள்ள நாதஸ்வரத்து ஈடு கொடுக்கக் கூடிய பெண் குரல் யாருக்கு இருக்கிறது என்று பல விதமாக ஆய்வு செய்திருக்கிறார். காரணம், நாதஸ்வரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அவ்வளவு கனம்..! அந்த இசைக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனமான பெண் குரல் யாருக்கு இருக்கு என்பதுதான் அவரது ஆய்வு...?

பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்ததில், எஸ். ஜானகி அவர்கள்தான் நாதஸ்வரத்துக்கு மிகவும் சரியாக பொருந்தினார். அதனால் அவரை இப்பாடலைப் பாடவைத்தார்.

@ இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, திரு ஞான சம்பந்தரின் தேவாரப் பாடலான- "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"! என்ற பாடலைத்தான்.

இந்த பாடலைத்தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்கள் நாதஸ்வரத்தில் வாசித்து விட்டுச் சென்றாராம். அதுவும் இப்போதைய மெட்டில்! 

பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி 
வரவழைக்கப்பட்டார்! தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போது என்றால் 1962-ல்!

@ இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!

பின்னூட்டத்தில் நண்பர் அருண் கொடுத்த தகவல் அப்படியே இங்கே..!

இப்படலை பற்றி எனக்கு தெரிந்த ஒரு தகவல்..

முதலில் இப்பாடல் லதா மங்கேஷ்கர் பாடுவதாகத்தான் இருந்தது.. அதற்காக திரு.S.M சுப்பையா நாயுடு மும்பை வரை சென்று பாடலின் சங்கீத சுரத்தை சொல்லியிருக்கிறார்.


சற்றே தயங்கிய லதா மங்கேஷ்கர் பிறகு கூறுகிறேன் என்றும் , பிறகு நாதஸ்வர இசையோடு பாடும் அளவிற்கு தான் இன்னும் பக்குவப்படவில்லை என்றும் திரு.S.M சுப்பையா நாயுடுவிடம் கூறியிருக்கிறார்.


பிறகு இந்த பாடலுக்கு அவரை பரிந்திரைத்த நபரே ஜானகி அம்மவை பரிந்துரைத்திருக்கிறார்.. அவரது பெயரை மறந்துவிட்டேன். பிறகு தான் ஜானகி அம்மாவை இந்த பாடலுக்காக திரு.S.M சுப்பையா நாயுடு அவர்கள் அழைத்து ட்ராக் பாட சொல்லி கேட்டிருக்கிறார்.. அவர் பாடிய அந்த முதல் ட்ராக்கே அவருக்கு பிடித்து போக படத்திலும் அவரது குரல் ஒலியிலேயே வந்தது.


இதை ஜானகி அம்மாவே சில மாதங்களுக்கு முன்னால் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மனதோடு மனோ” நிகழ்ச்சியில் நினைவு படுத்தினார்....

உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்


அன்புடன்
மதுரை அருண்