
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Thursday, 25 February 2010
சந்தையில வாங்கி வந்த..! - கிராமியப் பாடல்
கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'சந்தையில வாங்கி வந்த சரி ஜோடி காளைகளா..!'
இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, ஒரு கிராமத்து இளைஞனின் காதலை, அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அழகை மிக அழகாகப் பாடுகிறார்... அதுவும் அந்த இளைஞன் அவனது காளைகளுடன் பேசிக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இப்பாடல்.!
மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன் உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!
Monday, 22 February 2010
ஆத்து மணலிலே கோட்டை கட்டி..! - கிராமியப் பாடல்
கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'ஆத்து மணலிலே கோட்டை கட்டி..!'
இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிக அழகாகப் பாட, அதை அப்படியே அவரது பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுகிறார்கள், மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல்... போகப் போக துள்ளலிசைப் பாடலாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!
மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன் கலந்த துள்ளலிசைப் பாடலாக... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!

Thursday, 18 February 2010
அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..! - கிராமியப் பாடல்
கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..!'
எப்பாடலிலும் பாடகர் பாடியதைத்தான், பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுவார்கள்... இப்பாடலில் அப்படியில்லை... பாடகர் பாடுவதை குழுவினர் பாடுவர், பின் குழுவினர் பாடுவதை பாடகர் பாடுவார்...துள்ளலிசையின் ஆரம்பிக்கும் பாடல்... போகப் போக துடிப்பான இசையாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!
மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டுப் பாருங்க... அப்புறம் சொல்வீங்க..!

Tuesday, 16 February 2010
தமிழா... நீ பேசுவது தமிழா..! - தமிழிசைப் பாடல்!
தமிழா... நீ பேசுவது தமிழா..! என்ற பாடல்தான் இது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடல் இது, இசையமைத்து, பாடியிருப்பவர் நம் கலைமாமணி திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்...
இப்பாடலில் ஆங்கில வார்த்தைகள் எப்படி நம் தமிழை சிதைத்து ஊடுருவியுள்ளன என்பதை கவிஞர் கோபத்துடன் எழுதியுள்ளார், அதை அப்படியே தம் குரலில் பிரதிபலித்துக் காட்டியுள்ளார் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்..!
அன்பு நண்பர் அமுதநேசன் அவர்கள் மின்னஞ்சல் மூலம் என்னிடம் வேண்டுகோள் விடுத்த பாடல்தான் இந்த 'தமிழா... நீ பேசுவது தமிழா..! எனும் பாடல்.
இந்த பாடலை மிகத் தாமதமாக வழங்குவதற்கு மன்னிக்க வேண்டும் அமுதநேசன்... எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும், இப்பாடலை எனக்கு வழங்கிய நண்பர் தமிழ் சாந்த குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்...
இப்படலை கேட்டுப் பாருங்கள்... வேண்டுவோர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்..!
இதோ அப்பாடல்...

Labels:
காசி ஆனந்தன்,
தமிழிசை,
நேயர் விருப்பம்,
புஷ்பவனம் குப்புசாமி
Sunday, 14 February 2010
சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… - திரைப் பாடல்
‘சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… உன்னை நெஞ்சில் வச்சிகிட்டேன்..!’
எனை நேசித்துக் கொண்டிருக்கும் என்னுடைய கவிதைக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது…
நாங்களிருவரும் நேசித்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் சேர்ந்து வாழ்கின்ற சூழல் இன்னும் அமையவில்லை… ஆதலால் இன்னொரு ஜென்மம் எடுத்தேனும் உனக்காக காத்திருப்பேன் என என்னவள் என்னிடம் கூறினாள்… இப்பாடலின் வழியாக..! உப்படாலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உன் நினைவுதானடா என்றாள்..!
இப்பாடல் இடம் பெற்ற படம்: தாஸ், பாடியவர்கள்: ஹரிஹரன் மற்றும் ஸ்ரேயா கோஷல், இசை: யுவன் சங்கர் ராஜா
என்னவளுக்காகவும், எனக்காகவும் எங்களைப் போன்ற காதலர்களுக்காகவும் இக்காதலர் தினத்தில் இப்படாலை பதிவிலிடுகிறேன்… கேட்டு மகிழுங்கள்..!

Labels:
Das,
Jayam Ravi song,
என் விருப்பம்,
திரைப் பாடல்,
மெல்லிசை
Tuesday, 9 February 2010
புது ரூட்டுலதான்..! - கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்..!
ஏழிசை மன்னர், கான தேவன் கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்று ..!
சீயான் என்று அழைக்கப்படும் விக்ரம் அறிமுகமான முதல் படம் மீரா, அப்படத்தில் இடம்பிடித்த பாடல் தான் 'புது ரூட்டுலதான்..!' பாடல்
பாடலின் வரிகள் அத்தனையும் முத்துக்கள்தான்... இசைஞானி இளையராஜாவின் இசைத் தாலாட்டில், கான தேவனின் மயக்கும் குரலில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்...
யேசுதாஸ் மற்றும் அவரது குழுவினரும் இப்பாடலில் தனி ஆவர்த்தனமே செய்திருப்பார்கள்... கேட்டுப் பாருங்க..!

Labels:
என் விருப்பம்,
கே.ஜே யேசுதாஸ்,
திரைப் பாடல்,
மெல்லிசை
Subscribe to:
Posts (Atom)