ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 14 June 2011

செவலக்காளை ரெண்டு பூட்டி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்!




"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..!" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன். 


கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் மெல்லிசை கலந்த துள்ளலிசைப் பாடல்...


அக்காலத்தில் வயல்வெளிகளில் உழவு உழும் போதும், நாத்து நடும் போதும் களைப்பு தெரியாமல் இருக்க, தெம்மாங்கு பாடல்களை பாடி களைப்பு தெரியாமல் வேலையை முடிப்பார்கள். கூட இருக்கும் பெண்கள் குலவை போட்டு பாடுபவரை உற்சாகப் படுத்துவார்கள். அதை கேட்கும் சுகமே தனி சுகம்தான்.

இதுதான் இப்பாடலின் பின்னணி. எனது மாமன் உழவு செய்கிறான், அதற்கு ஏற்றாற் போல் நாற்று நடவேண்டும், சம்பா நெல் நடவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. தலைவியின் கூற்றை கூட இருக்கும் பெண்கள் குலவை இட்டு ஆமோதிக்கிறார்கள். தலைவனோ மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும் அதற்கும் குலவையிடுங்கள் என்கிறான். அதற்கும் குலவையிடுகிறார்கள்


நையாண்டி மேளம், உருமி, குலவை இசை, புல்லாங்குழல் என கிராமத்திற்கே உரிய வாசனையை இப்பாடலில் புகுத்தியிருப்பார் புஷ்பவனம் குப்புசாமி. கேட்க கேட்க பரவசப்படுத்தும் பாடல் இது....


எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



செவலக்காளை..! | Upload Music

(நன்றி: திரு. கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்)




Wednesday 11 May 2011

தூண்டா மணி விளக்கு..! - நேயர் விருப்ப பாடல்!



''தூண்டா மணி விளக்கு... தூண்டாம நின்னெரியும்'' என்ற பாடலை இன்றைய நேயர் விருப்ப பாடலாக பதிவிலிடுகிறேன். இப்பாடலைப் பற்றிய தகவலை  இணையத்தில்தேடித் தேடி சலித்துப் போனேன். ஆதலால் இப்படம் குறித்த சுவராசியத் தகவல்களை கொடுக்க இயலவில்லை. அதற்கு வாசகர்கள் எனை மன்னிக்க வேண்டுகிறேன்.

விஜயகிருஷ்ணராஜ் அவர்களின் இயக்கத்தில் 11.08.1987 - அன்று வெளியான, வாழ்க வளர்க திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது. புலவர் நா.காமராசன் எழுதிய வரிகளுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரலில் நம் செவிகளை இப்பாடல் தாலாட்ட வருகிறது. இப்படத்தில் ராதாரவி, பாண்டியராஜன், சரிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட அன்பு நண்பர் நக்கீரன் மகாதேவன் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.



தூண்டா மணிவிளக்கு..! | Online Karaoke

------------------------------------------------
Anonymous Nakkeeran Mahadevan said...

இனிய நட்பிற்கு என் விருப்ப பாடலாய் இதை அனுப்புவிர்களா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பாடல் விபரம்: ”துங்காமணிவிளக்கு துண்டம நின்னெறியும் காத்துபட்டு கரையாது கரைபடிச்சு கருக்காது என் துக்கமதை வெளீய சொன்னா மங்கிவிடும் மங்கிவிடும்” படம் பெயர் தெரியவில்லை .

இயக்குநர் திரு.விஜயகிருஷ்ணராஜ் நாயகன் ராதா ரவி , நாயகி சரிதா.... இது மிக தாள நயத்துடன் ,திரு இளையராஜா இசையில் உருவானது. தயவுசைது பதியவும் . நன்றி ,

நட்புடன்

நக்கீரன்
7 May 2011 16:05
---------------------------------
நன்றி: இப்பாடலை கேட்டதும் தேடி எடுத்துக் கொடுத்த சுக்ரவதனீ குழுமத்தின் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு..!




Tuesday 26 April 2011

என்னடி முனியம்மா..! - டி.கே. எஸ். நடராஜனின் கிராமியப் பாடல்!


'அட என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச மையி...' என்ற உண்மையான கிராமியப் பாடலை இன்று என் விருப்ப பாடலாக பதிவிலிடுகிறேன்.

என்னுடைய சிறுவயதில் கேட்ட பாடல். ஊர் திருவிழாவின் போது இப்பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். கேட்கவே இனிமையாக இருக்கும். டி.கே.எஸ். நடராஜன் என்ற கிராமியப் பாடகர் பாடிய பாடலிது. இவர் வெளியிட்ட நாட்டுப்புற தெம்மாங்கு என்ற கிராமிய இசைத் தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது.

இப்பாடல் ஏதோ ஒரு சினிமாவில் இடம் பெற்ற பாடலோ என்று என்னுடைய சிறுவயதில் நினைத்துக் கொள்வேன். அப்போதெல்லாம் யாரேனும் கண்ணில் அதிகமாக மை வைத்துக் கொண்டு தெருவில் வந்தால் (என் வயது பெண் பிள்ளைகளைத்தான்) இந்தப் பாடலைத்தான் பாடி கிண்டல் பண்ணுவோம்.

அருமையான கிராமிய இசையும், டி.கே.எஸ். நடராஜன் அவர்களின் வெண்மணிக் குரலும் நம்மை மெய்மறக்கச் செய்து விடும். தன் கிராமத்து கட்டழகியை அவர் வர்ணிக்கும் விதமே தனி அழகு.

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


என்னடி முனியம்மா..! | Musicians Available

நன்றி: டி.கே.எஸ். நடராஜன் குழுவினர்

சுவாரசியத் தகவல்கள்


@ இப்பிரபலமான கிராமியப் பாடலை, அர்ஜுன் நடித்து வெளிவந்த 'வாத்தியார்' படத்தில் ரீமிக்ஸ் செய்திருப்பார்கள். அதில் டிகேஎஸ் நடராஜனும் இப்பாடலுக்கு பாடி, ஆடி நடித்திருப்பார்.


@ கிராமியப் பாடல்களை பாடினாலும், சினிமாவிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்துள்ளார். துணை கதாபாத்திரங்களாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.




Saturday 16 April 2011

எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்



விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'எல்லாம் கெடக்கடும் வாங்க... ரெண்டு இளசு வெத்தல தாங்க..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

விஜயலட்சுமி அம்மாவின் கணீர்க்குரலில் வரிகள் வலை விரிக்க, கோரஸ் பாடியிருக்கும் குழுவினரும் அதற்கு ஒத்திசைக்க, அதன் பின்னர் வரும் உருமி, நாதஸ்வர இசை, நையாண்டி மேள இசை
 எல்லாம் நம்மை எளிதில் வளைத்து விடுகிறது. குடுகுடுப்பை போன்ற ஒரு இசைக்கருவியும் நம்மை உசுப்பேற்றுகிறது. 

கிராமத்து மக்களுக்கு வெறும் வாயை மெல்லப் பிடிக்காது, வெத்திலை போட்டு மெல்லவது அவர்களுக்கு மெத்தப் பிடிக்கும். அதனைப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்து பாடலை பின்னியிருப்பார்.. அவரது குரலாலும், அவரது குழுவினரின் குதுகல இசையாலும் நம்மை பின்னலிட வைக்கிறார்கள்.



அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Wednesday 6 April 2011

முதன் முதலாக நான் நடித்த டாகுமெண்டரி படம்..!

கல்லூரி வாழ்க்கையின் போது நாடகம் எழுதி, இயக்கி, நடித்து பரிசுகள் வாங்கியது எல்லாம் பத்து வருடத்திற்கு முன்பு நடந்தவை. அவை எல்லாம் என் கலை தாகத்தை அப்போதைக்கு தீர்த்து வைத்தவை.

அதன் நீட்சியாக, தற்போது '0 Value' என்ற டாகுமெண்டரி படத்தில் முதன் முதலாக நடித்துள்ளேன். இதில் ஒரு வழக்கறிஞராக (ரவீந்திரன் என்ற பெயரில் நடித்துள்ளேன்) பேசியுள்ளேன்.

நான் திரையில் தோன்றுவதில் இதுதான் எனது முதல் பிறப்பு..!


இந்த டாகுமெண்டரியை இயக்கிய என் அன்புத் தம்பி வெங்கடேசனுக்கும், அவனுக்கு உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!




Wednesday 30 March 2011

நாடே இதயம் எங்கள் நாடே உதிரம்..! - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சிறப்பு பாடல்


1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய 'நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்...' என்ற பாடலை இன்று சிறப்புப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

இன்று 2011 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் நமது பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.

இப்பாடலை எழுதியவர், இசையமைத்தவர் யார் என்ற விபரத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவருடைய கணீர்க் குரலில் இப்பாடல் நமது நாடி நரம்புகளை முறுக்கேற்றும்...

இந்தியா கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே 120 கோடி மக்களின் ஆசை. அதில் கிரிக்கெட் தனியிடம் பெறுகிறது. இந்த உலகக் கோப்பையினை வெல்ல இந்திய அணிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

சாதனை நாயகன் சச்சினுக்கு சாதனை மகுடம் சூட்ட இந்த போட்டி நிச்சயம் உதவும்.. இந்தியா கோப்பையை வெல்லும். வெல்க இந்தியா வெல்க..!

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நாடே இதயம்..! | Upload Music

சிறப்புத் தகவல்கள்

@பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்தவர். 


@இந்த பாடல் 1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த, ஜெயா தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.




Monday 28 March 2011

வந்தா வராண்டி..! மதுரை சுண்ணாம்புதாண்டி..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'சந்திரரே சூரியரே... சாமியே என் துரையே... என்ன சொல்லி கூப்பிடட்டும்...... வந்தா வராண்டி... மதுரை சுண்ணாம்புதாண்டி..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

வந்தா வராண்டி.. மனுசன் போனா போறாண்டி... என்ற சந்தத்தோடு பாடலின் வரிகள் ஒலிக்க, உறுமி மேளமும் நையாண்டி மேளமும் நையப்புடைக்க, சலங்கை ஒலி நம்மை ஆட வைக்க, நாதஸ்வரம் நம்மை தலையசைக்க வைக்கிறது...

அட பாட்டை கேட்டுப் பாருங்க... நீங்க ஆடலன்னா ஏன்னு கேளுங்க... நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடலிது. 'எலுமிச்சம் பழம் சிவப்பு.. அட இஞ்சிமுறப்பா ஒரப்பு..' என்ற பிரபல வரிகள் இந்த பாடலில்தான் இருக்கிறது.

அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பாடாலான 'ஆத்தோரம் கொடிக்காலாம்.. அரும்பரும்பா வெத்திலையாம்..' என்ற பாடலின் நான்கு வரிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


சந்திரரே சூரியரே..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Saturday 26 March 2011

விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! - பரவை முனியம்மாவின் கிராமியப் பாடல்


பறவை முனியம்மாவின் கணிர் குரலில் 'வெரட்டிவெரட்டி பிடிக்கும் போது என்ன சொல்லுமாம் கோழிக் குஞ்சு' என்ற கிராமியப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

கோழியையும், கோழிக் குஞ்சியையும் வைத்து பரவை முனியம்மா அவர்கள் இப்பாடலைப் பாடியிருக்கும் விதமும், இதற்கான நமது கிராமத்து இசைகளும்.. அடடா நம்மை ஆட வைக்காமல் விடாது என்றுதான் சொல்ல வேண்டும்.

நையாண்டி மேளமும், நாதஸ்வரமும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கும். பரவை முனியம்மாவுடன் பாடும் கோரஸ் குரல்களும் சளைக்கவில்லை. இவர் பாடி முடித்ததும், அதற்கு பின்னிசையாக நாதஸ்வரமும், மேளமும் தாளம் தப்பாமல் பின்னியெடுக்கிறது.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட அன்பு நண்பர் திரு. ரமேஷ் அவர்களுக்கு எனது நன்றி. அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். இப்பாடல் உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! | Upload Music

நன்றி: பரவை முனியம்மா & குழுவினர்

-------------------------------------------------------

Ramesh said...
indha websitil erendu padalgalai keten migunda maghilchi. enudaya laptopil tamil version illai adalal ennai manikkavum. en virupa padalaga PARAVAI MUNIYAMMA padiya padal 'VERATI VERATI PUDIKUMBODHU ENA SOLUMMA KOZHIKUNJU' endra padalai ketka migunda assai mudinthal tharavum.

Ramesh
17 December 2010 21:37




Friday 18 March 2011

வீடு வரை உறவு..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி...' என்ற காலத்தால் அழிக்க முடியா தத்துவப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.

ஜூலை 14, 1962 -ல் வெளியான பாதகாணிக்கை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிது. இப்படத்தினை இயக்கியவர் கே. சங்கர். மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், கவியரசு கண்ணதாசனின் அமர வரிகளில், டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சிய மயமான குரலில் ஒலிக்கிறது இப்பாடல்.

இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் அண்ணனாக வரும் அசோகன் அவர்கள் ஒரு கால் இல்லாமல், இரு கை கட்டைகளை ஊன்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகும் போது பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும்... இப்பாடலின் வரிகளை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன..?

எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் டான் சமுசா அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த இந்த தத்துவப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


வீடு வரை உறவு...! | Online Karaoke
---------


Anonymous Don Samusa said...

எனக்கு பிடித்த பாடல் ஒன்று, அதன் வரிகள் எனக்கு நினைவில்லை...

அதில் அசோகன் அவர்கள் ஊனமுற்ற வேடத்தில் கடலை நோக்கி


சென்று கொண்டே பாடுவார்...

அந்த பாடலை எப்படியாவது அனுப்புங்கள்...
2 March 2011 14:15
--------------------------------

இனி சில சுவாரசியத் தகவல்கள்

@ பட்டினத்தாரின் பாடலிருந்து இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் உருவாக்கினார்.

மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வௌளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே

மற்றும்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக 
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே

இந்த இரண்டு பாடலும் பட்டினத்தார் எழுதியதே. இரு பாடலும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. 

இதன் பொருள் என்னவெனில், செல்வமும் உறவும் வருவது வீடுவரைதான். கதறி அழும் மனைவி வருவது வீதி வரைதான். அடித்துக் கொண்டு அழும் பிள்ளையின் விஜயம் சுடுகாடு மட்டும்தான். ஆனால் கடைசி வரை கூட வருவது செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான் என்றார் பட்டினத்தார்.



கண்ணதாசன் இதைத் தழுவி எழுதிய இப்பாடலில் கடைசி வரியான 'பாவமும் புண்ணியமும்தான் கடைசிவரை கூடவரும்' என்ற வாக்கியத்தை விட்டு விட்டார். இதைப்பற்றி நண்பர் ஒருவர் வினவியதற்கு கண்ணதாசன் சொன்ன பதில் “அப்படி ஓர் அருமையான வாக்கியத்தை சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு. அதனால் தான் அதைப் பாடலில் குறிப்பிடவில்லைஎன்றார். 

@ உலக நாயகன், பத்மஸ்ரீ கமலஹாசன் (குழந்தை நட்சத்திரமாக) நடித்த மூன்றாவது படம் இது.

@ இப்பாடலில் வரும் பெண் குரல் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலாகும். இவருடைய உண்மையான பெயர் எல். ராஜேஸ்வரி ஆகும்.

கோரஸ் பாடிக் கொண்டிருந்த இவரை முதன் முதலில் 'நல்ல இடத்து சம்பந்தம்' படத்தில் இவருக்கு 4 பாடல்களை கொடுத்து பாடகியாக்கினார்  அப்படத்தின் இசையமைப்பாளரான கே.வி. மகாதேவன்.

டைட்டிலில் பெயர் போடும் போது குழப்பம் வந்தது. ஏற்கனவே எம். ராஜேஸ்வரி என்ற பெயரில் ஒரு பாடகி இருந்ததால், இவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி என பெயர் மாற்றினார் இப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.பி.நாகராஜன்.




Saturday 5 March 2011

சிங்கார வேலனே தேவா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)



கொஞ்சும் சலங்கை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே தேவா...' என்ற அற்புதமான பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

நவம்பர் 14, 1962 அன்று வெளியான இப்படத்தினை தயாரித்து, இயக்கியவர்  திரு. எம்.வி.இராமன் அவர்கள். இசைமேதை எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்பாடலின் வரிகளை கு.மா.பாலசுப்ரமணியம் எழுதிக் கொடுக்க, குரல் வழியே உயிர் கொடுத்தவர் எஸ். ஜானகி அவர்கள். இப்பாடலில் நாதஸ்வரம் மிக முக்கியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த நாதஸ்வர இசையின் இப்பாடலுக்கு வாசித்தவர் பிரபல நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள்.

எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் திரு. தாம்ஸ் அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



சிங்கார வேலனே தேவா..! | Musicians Available


------------------------------

Anonymous Dhams said...



Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I like to hear old songs .plz send me the song "SINGARA VELANE DEVA" from KONJUM SALANGAI and "THUKAMUM KANKALAI THALUVATUMEY " SONG.

THANK YOU
13 February 2011 11:46
----------------------------------
இப்பாடல் குறித்த சில தகவல்கள்

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு! என்று நாமெல்லாம் கிண்டல் பண்ணுவோமே... அந்த புகழ் பெற்ற டயலாக் இடம் பெற்ற பாடல் இதுதான்.

இப்படத்தின் நாயகி சாவித்திரி முதலில் ஒரு வரிதான் பாடுவார்... அதைக் கேட்ட ஜெமினி கணேசன் அந்த வரியை நாதஸ்வரத்தில் வாசிப்பார். அதைக் கேட்டதும் சாவித்திரி பாடாமல் நிறுத்தி விடுவார். பாடியது யாரென்று பார்க்கும் நோக்கில் ஜெமினி சாவித்ரியைப் பார்க்க வருவார்.. உட்கார்ந்திருக்கும் சாவித்திரி ஜெமினியைக் கண்டதும் எழுந்து விடுவார்... அப்போது

ஜெமினி: சாந்தா உட்கார்...
ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்...
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்க்கு ஓடோடி வந்த என்னை 
ஏமாற்றிவிடாதே சாந்தா...

சாவித்திரி: என்னங்க, உங்கள் நாதஸ்வரத்திற்கு முன்னாள்..?

ஜெமினி: தேனோடு கலந்த தெள்ளமுது, 
கோலநிலவோடு சேர்ந்த குளிர்தென்றல்,
இந்த சிங்கார வேலன் சந்நிதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்
பாடு சாந்தா பாடு..!

இதுதான் அந்த டயலாக்கோட முழுவிபரம்..!

@ இப்பாடலில் ஒரு பல்லவி ஒரு சரணம் மட்டுமே மேலோங்கி நிற்கும்.. மீதமெல்லாம் சங்கீத தாள வரிகளான.. சரிகமப.... சரி நித ப... போன்ற சங்கீத மொழிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும்... கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.

@இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, இப்பாடலில் இடம் பெற்றுள்ள நாதஸ்வரத்து ஈடு கொடுக்கக் கூடிய பெண் குரல் யாருக்கு இருக்கிறது என்று பல விதமாக ஆய்வு செய்திருக்கிறார். காரணம், நாதஸ்வரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அவ்வளவு கனம்..! அந்த இசைக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனமான பெண் குரல் யாருக்கு இருக்கு என்பதுதான் அவரது ஆய்வு...?

பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்ததில், எஸ். ஜானகி அவர்கள்தான் நாதஸ்வரத்துக்கு மிகவும் சரியாக பொருந்தினார். அதனால் அவரை இப்பாடலைப் பாடவைத்தார்.

@ இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, திரு ஞான சம்பந்தரின் தேவாரப் பாடலான- "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"! என்ற பாடலைத்தான்.

இந்த பாடலைத்தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்கள் நாதஸ்வரத்தில் வாசித்து விட்டுச் சென்றாராம். அதுவும் இப்போதைய மெட்டில்! 

பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி 
வரவழைக்கப்பட்டார்! தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போது என்றால் 1962-ல்!

@ இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!

பின்னூட்டத்தில் நண்பர் அருண் கொடுத்த தகவல் அப்படியே இங்கே..!

இப்படலை பற்றி எனக்கு தெரிந்த ஒரு தகவல்..

முதலில் இப்பாடல் லதா மங்கேஷ்கர் பாடுவதாகத்தான் இருந்தது.. அதற்காக திரு.S.M சுப்பையா நாயுடு மும்பை வரை சென்று பாடலின் சங்கீத சுரத்தை சொல்லியிருக்கிறார்.


சற்றே தயங்கிய லதா மங்கேஷ்கர் பிறகு கூறுகிறேன் என்றும் , பிறகு நாதஸ்வர இசையோடு பாடும் அளவிற்கு தான் இன்னும் பக்குவப்படவில்லை என்றும் திரு.S.M சுப்பையா நாயுடுவிடம் கூறியிருக்கிறார்.


பிறகு இந்த பாடலுக்கு அவரை பரிந்திரைத்த நபரே ஜானகி அம்மவை பரிந்துரைத்திருக்கிறார்.. அவரது பெயரை மறந்துவிட்டேன். பிறகு தான் ஜானகி அம்மாவை இந்த பாடலுக்காக திரு.S.M சுப்பையா நாயுடு அவர்கள் அழைத்து ட்ராக் பாட சொல்லி கேட்டிருக்கிறார்.. அவர் பாடிய அந்த முதல் ட்ராக்கே அவருக்கு பிடித்து போக படத்திலும் அவரது குரல் ஒலியிலேயே வந்தது.


இதை ஜானகி அம்மாவே சில மாதங்களுக்கு முன்னால் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மனதோடு மனோ” நிகழ்ச்சியில் நினைவு படுத்தினார்....

உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்


அன்புடன்
மதுரை அருண்




Monday 28 February 2011

ஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்


'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் அற்புதமான மெட்டமைப்பில், அவரது தெள்ளிய கிராமத்துக் குரலில் இப்பாடல் ஒலிக்கிறது... இவரது குழுவினரின் கோரஸும், ஹம்மிங்கும் நம்மை அழகாக ரசிக்க வைக்கும்.

இப்பாடலில் தமிழிசையினை மிகவும் அற்புதமாகப் பயன்படுத்தி இருக்கிறார் குப்புசாமி. புல்லாங்குழல் இசை தனி ஆவர்த்தனம் செய்கிறது.

படிக்காமல் போன கிராத்து விவசாயி ஒருவர், இளம் பிராயத்தில் படிக்காமல் விட்டுவிட்டால் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மிக அழகாக இப்பாடலில் உணர்த்துகிறார் புஷ்பவனம்.

மெல்லிசை கலந்த கிராமியப் பாடலை கேட்க ஆசையெனில் இப்பாடலைக் கேளுங்க. தங்களுக்கு பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...


ஏலக்காயாம் ஏலேரீசாம்..! | Musicians Available

(நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்)




Monday 21 February 2011

பூங்காத்து திரும்புமா...? - மலேசியா வாசுதேவன் சிறப்புப் பதிவு..!


'பூங்காத்து திரும்புமா..? என் பாட்டை விரும்புமா..?' என்ற பாடலை மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடலை இன்று பதிவிலிடுகிறேன்...

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1985-ல் வெளி வந்த திரைப்படம் 'முதல் மரியாதை'

இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் முத்துக்கள் என்றே சொல்லலாம். அதில் சிறப்புப் பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம்... இப்பாடல் தேசிய விருது பெற்ற பாடலாகும். (வைரமுத்துவிற்கு கிடைத்தது)

வைரமுத்துவின் வரிகளுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, 'அமரர்' மலேசியா வாசுதேவன் குரல் வழியே உயிர் கொடுத்திருப்பார்... நெஞ்சை உருக்கும் படி இருக்கும் அவரது குரல்...

நேற்றைய தினம் (20.02.2011) மறைந்த திரு. மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு இனிய தமிழ்ப்பாடல்கள் தளம் சார்பிலும், இதன் வாசகர்கள் சார்பிலும் இப்பாடல் மூலம் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்...

இனி இந்த இசைப் பூங்காத்து திரும்புமா..?


பூங்காத்து திரும்புமா..? | Upload Music

மலேசியா வாசுதேவனைப் பற்றி சில வரிகள்

@ மலையாள பூமியை பூர்வீகமாக கொண்டவர், மலேசியாவில் பிறந்தவர். மலேசிய நாடகங்களில் நடித்தவர், சினிமா மேல் பற்று கொண்டு சென்னை வந்தவர், இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ் குழுவில் இணைந்து பின் சினிமாத் துறையில் காலடி வைத்தவர். 8000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்' என்ற படத்தில் "பாலு விக்கிற பத்தம்மா..." என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.
ஆனால் அதற்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே' படத்தில் கமல்ஹாசனுக்காக அவர் பாடிய "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.


@ ரஜினிகாந்திற்கு அதிகமான பாடல்களைப் பாடியவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்'. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்பட பல கதாநாயகர்களுக்கு பிண்ணனி பாடியவர்.  கலைமாமணி பட்டம வென்றவர்.

மலேசியா வாசுதேவனைப் பற்றி பிரபலங்கள் சொன்னவை...


@ 'என் நடிப்புக் கேத்த அழுத்தக் குரல் இவன்கிட்டதான்யா இருக்கு..' - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
தன்னுடைய பெயரால் ஒரு நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் 'மலேசியா' வாசுதேவன் - இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ்

@
என்னை முதன்முதலாக இசையமைப்பாளராக ஆக்கியதே அவர்தான். அவர் கதை, வசனம் எழுதி ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை' என்ற படத்தில்தான் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

பாடகர்
, இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், எனக்கு அவரிடம் பிடித்தது அரிதாரம் பூசாத நல்ல மனிதன் என்பதுதான் - கங்கை அமரன்

@ மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எடுப்பதாக இருந்த ஒரு படத்தில் வாலியின் வரிகளில் ஒரு பாடலைப் பாட வைத்தார் இளையராஜா. எம்.ஜி.ஆருக்கு வாசுவின் குரல் மிகவும் பிடித்துவிட்டது. இவரை முன்பே என்னிடம் அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை. அந்தளவிற்கு எம்.ஜி.ஆரை தன் குரலால் கவர்ந்து விட்டார் மலேசியா வாசுதேவன். 




Thursday 17 February 2011

கூட்டு வண்டி காளை போல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!




கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை உருக்கும் காதல் சோக கீதம்தான் இந்த 'கூட்டு வண்டி காளை போல..!' எனும் பாடல்... 

2004 முதல் புஷ்பவனத்தாரின் பாடல் சிடியை வைத்துக் கொண்டிருக்கிறேன்... இத்தனை வருடங்களும் இந்த முத்தான பாடல் என் கண்ணில் படவில்லை, காதில் கேட்கவில்லை... அண்மையில் ஒவ்வொரு பாடலாக கேட்டபோதுதான் இப்பாடலைக் கண்டுகொண்டேன். அடடா இத்தனை நாள் இப்பாடலை கேட்காமல் போனோமே என்று என்னை நானே நொந்து கொண்டேன்...

இப்பாடலைக் கேட்டதும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது... என் காதல் தோல்வியும்... இப்பாடலின் வரிகளும், இசையும் என்னை உருக்கி விட்டன என்பதே இதன் சாராம்சம்.

(காதல் தோல்வி அடைந்த ஒவ்வொரு ஆண்மகனுக்கும்,  இப்பாடல் அவனது பழைய காதல் நினைவுகளை, கண்டீப்பாக அவன் முகத்தில் விசிறியடிக்கும்...)

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  (சங்கதி வைத்துப் பாடும் குரலைக் கேளுங்களேன்...) உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை விவசாயியின் வாகனமான மாட்டு வண்டியோடும் குளம், கொக்கு, மீன், குண்டு மல்லி போன்றவற்றோடும் இணைத்துப் பாடுகிறார்...


அவரின் சோகத்தைப் புல்லாங்குழல் இசையும், மாட்டின் கழுத்தில் இருக்கும் சலங்கை ஒலி இசையும், கஞ்சிரா இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு கிராமத்து மனிதனுடைய காதல் தோல்வியை...!

உங்களுக்குப் பிடித்திருப்பின் இந்த முத்துப் பாடலை இலவசமாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.. அதாவது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!


கோடான கோடி நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர் 




Wednesday 16 February 2011

வரான் வரான் பூச்சாண்டி..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

இரண்டுபேர் படத்தில் குஷ்பு, ரோஜா

'வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே..!' என்ற பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

2003-ல் வெளிவர இருந்த 'இரண்டு பேர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளலிசைப் பாடல் இது...

இப்பாடலை எழுதி, பாடியவர் ஆபாவாணன். இசை சுனில் வர்மா. பாட்டைக் கேட்டுப் பாருங்க... அட்டகாசமாய் எழுதியது மட்டுமின்றி... அருமையாகவும் பாடியிருக்கிறார்.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!

-----------------------------------------------
Anonymous Ramachandran said...


dear moganan,


i appreciate your interest of songs

thanks for your old tamil songs while listening that i forget surroundings regrds

request to post one song "vaaran vaaran poochandi mattu vandiyile" i heard this song in sun tv asatha povadhu yaaru programme. whether this is film song or folk song please post

ramachandran, kgf
23 December 2010 18:21
------------------------------------
இப்படம் குறித்த தகவல்கள்..!

@இப்படத்தின் இஞை அமைப்பாளர் சுனில் வர்மா. இவர் க்யான் வர்மாவின் மகன். க்யான் வர்மா, மனோஜ்-க்யான் என்ற பெயரில் இசை அமைத்த இரட்டையரில் ஒருவர். ஊமை விழிகளில் இவர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஆபாவாணன்.


@ 'இரண்டு பேர்' திரைப்படக் குழு


நடிக நடிகையர்: ராம்கி, குஷ்பு, ரோஜா, சங்கவி, நாசர், செந்தில், பிரதாப் போத்தன் மற்றும் பலர்

கதை - இந்துமதி, ஒளிப்பதிவு - சுரேஷ் குமார், தயாரிப்பு - தேன்மொழி ஆபாவாணன், திரைக்கதை, பாடல்கள் மற்றும் இணை இசை - ஆபாவாணன்

இசை - சுனில் வர்மா (இசையமைப்பாளர் கியான் வர்மாவின் புதல்வர் - மனோஜ்-கியான் இரட்டையர்கள்), இயக்கம் - எஸ்.டி.சபாபதி


@2003ல் அந்தப் படம் வந்திருக்க வேண்டும்.வந்த மாதிரி தெரியவில்லை.ஆபாவாணன் ஒரு படம் எடுத்து பெரும் நஷ்டம் அடைந்தார்.அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய இந்துமதி படத்தின் தயாரிப்பிற்கு உதவியதால் நஷ்டமடைந்தார்.பின்னர் கங்கா-யமுனா-சரஸ்வதி என்ற சீரியலை எடுத்தார்.


@ ஆபாவாணன் படம் இது. பாடலைப்பாடியவரும் அவரே. இந்த நிமிடம் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி லேபில் தூங்கிக் கொண்டிருக்கிறது படம்! உலகத்திரைக்காட்சிகளில் இன்னும் வெளிவராத படம் இது!! இனியும் வருமா என்பதும் சந்தேகமே. காரணம்.. படத்தில் நடித்தபோது குஷ்பு, ரோஜாவுக்கெல்லாம் கல்யாணமே ஆகியிருக்கவில்லை. பாக்கியிருக்கும் காட்சிகளை இப்போது எடுப்பதானால் கண்டினியுட்டி கழுதை உதைக்கும்.


@படைப்பாளியின் அனுமதியோ அல்லது பெயர் மரியாதையோ இன்றி பாடலைச் சுட்டு, அதற்கான காட்சிகளையும் ஆங்கில அனிமேஷன் படங்களில் இருந்து சுட்டெடுத்து வெட்டி ஒட்டி புத்தம்புதிய காப்பியாக்கியிருக்கிறார்கள்! அது இணையத்தில் 2008 - லேயே சூப்பர் ஹிட் ஆனது..!


@கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் முதல் காட்சியில் இந்தப் பாடல் நான்கு வரிகள் வரும்.


(நான் நன்கு விசாரித்து, எனக்குத் தெரிந்த வரையில் இப்படத்தின் தகவல்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் தவறு இருப்பின் தக்க ஆதாரத்துடன் இணைய வாசகர்களை சுட்ட வேண்டுகிறேன்...)




Tuesday 8 February 2011

ஆசையே அலை போலே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)



ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே..! என்ற அற்புதமான பாடலை, இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..!


ஜனவரி
14, 1958, தைத் திருநாளன்று ஏ.கே.வேலன் கதை, திரைக்கதை, இயக்கம் தயாரிப்பில் வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

கவியரசர் கண்ணதாசனில் வைர வரிகளுக்கு
, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் அட்டகாசமான இசையமைப்பில், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடலிது...

இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும்
, இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வும் பற்றி எளிதாக விளக்கி விடுவார்... வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்... அந்த வரிகள்....

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?’

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட பழனிவேல் கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது நன்றிகள். இப்பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும். உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.



ஆசையே அலை போலே..! | Upload Music

------------

Anonymous Palanivelu Krishnasamy said...

Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I am ar ardent fan of old songs. Recently, while travelling by a bus, I happened to hear a song sung by SP Balasubramaniam. That impressed me very much.


I tried in the net to find and get it downloaded but in vain. Will you please get it for me?
The song is AASAIYE ALAI POLE NAMELLAM ADHAN MELE (Resung of the old popular song)
Thank you.

K. Palanivelu
10 January 2011 10:41
-----------------------------

இனி சுவாரசிய செய்திகள்

@அக்காலத்தில் கோடம்பாக்கத்தில் ரயில்வே கிராஸிங் மட்டுமே இருந்தது. மேம்பாலம் கிடையாது. ரயில் வந்து செல்லும் வரை இருபுறமும் இரயில்வே கேட்டை பூட்டி விடுவார்கள். சினிமா பிரபலங்கள் எல்லோரும் அந்த கேட்டில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு முறை ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக, கண்ணதாசன் காத்திருந்த போது, இப்பாடலை சிகரெட் பாக்கெட்டில் எழுதி வைத்தாராம். சிகரெட் பெட்டியில் சிந்திய வரிகள்... பின்னாளில் தமிழக மக்களின் செவிகளிலும் தேனிசையாய் சிந்தியது இப்பாடல்.

@இப்பாடலின் இசையமைப்பாளர் திரை இசைத் திலகம். கே.வி.மகாதேவன் அவர்கள்... இவர் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார் ! பாட்டு எழுதும் கவிஞர்களை வதைக்காமல், அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பயன் படுத்துவார் ! அப்படி அந்த பாட்டு மெட்டுக்குள் அடங்கவில்லை என்றால் " விருத்தம் " ஆக்கி பாட்டின் சுவையைக் கூட்டிவிடுவார் !

@1940 களின் ஆரம்பத்தில் – கே.வி. மகாதேவன் அவர்கள் சேலம் ‘மாடர்ன் தியேடர்ஸ்
-ல் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்!

அப்போது அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் ஓர் இளைஞனை மகாதேவனிடம் அழைத்து சென்று "மகாதேவா
, இவருக்கு குரல் வளம் எப்படி இருக்கின்றது என்பதை பரீட்ச்சை செய்து அனுப்பு!" என்றார் !

மகாதேவனும் அந்த இளைஞன் குரலை சோதனை செய்து பின்னர் வரச் சொல்லிப் பணித்தார் ! அவர் அங்கேயே தயங்கி நிற்கவே " ஊருக்குப் போவதற்கு பணம் இருக்கா ? " என்று அவரைப் பார்த்து கேட்டார் ! அந்த இளைஞன் உதட்டைப் பிதுக்கவே , மகாதேவன் அந்த இளைஞனுக்கு 2 .00 ரூபாய் பணம் கொடுத்து, கூடவே ஒரு சட்டையும் கொடுத்து அனுப்பினார் !

அந்த இளைஞன் யார் தெரியுமா
?  - அவர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் !

@திருச்சி லோகநாதன் சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் பாட வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்ல, ‘மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர்தான் நம்ம டி. எம். செளந்தரராஜன்.




Friday 28 January 2011

நாலு பேருக்கு நன்றி..! - பழைய திரைப்படப் பாடல்

'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்...

1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்தான் இந்தப் பாடல். ப.நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் இது.

இந்த தத்துவப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இசையமைக்க, டி.எம்.ஸ் தன் குரல் வழியே இப்பாடலுக்கு உயிரூட்டினார் என்றால் அது மிகையாகாது.

நன்றி யாருக்குச் சொல்வோம்... அதை எளிதாக சந்த நயத்தோடு கண்ணதாசன் விவரிக்கிறார் இப்பாடலில்.. ஆதலால்தான் இவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் பெற்ற பாடல்களாக விளங்குகிறது...

உதாரணத்திற்கு

"ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி..!" என்ற வரிகளைக் கவனியுங்கள்...


யாருமில்லாத அனாதையாக இறந்து விட்டால் அவரை எடுத்துச் செல்ல நால்வர் வேண்டும் அவருக்கு நன்றி சொல்கிறார்...


"இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி...
" - நன்றியை நாம் சொல்வதை சந்த நயத்தோடு எவ்வளவு அழகாக இங்கே கவியரசர் எடுத்துக் 
காட்டுகிறார்...


எனக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



நாலு பேருக்கு நன்றி..! | Online Karaoke



இப்பாடல் குறித்த சிறப்புத் தகவல்

இப்பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்


'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!

இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.

சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிப் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'

என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.

கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!