ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label நகைச்சுவைப் பாடல்கள். Show all posts
Showing posts with label நகைச்சுவைப் பாடல்கள். Show all posts

Tuesday, 29 December 2009

திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசைப் பாடல்களில் ஒன்றுதான் இந்த 'திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..!'

துள்ளலிசை மட்டுமின்றி, ஒரு கிராமத்து மனிதனின் கோழைத்தனத்தை எவ்வளவு நையாண்டித்தனமாக, கேலித்தனமாக தன் பாடல் வழியே எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார் என்பதை நீங்களே கேளுங்கள்...


திருப்பதிக்கு போயி வந்தேன்..! | Upload Music

நன்றி:  'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்



Thursday, 5 November 2009

ஜம்புலிங்கமே ஜடாதரா… - திரைப்படப்பாடல்


காசேதான் கடவுளடா படத்தில் இடம்பெற்ற கலக்கலான நகைச்சுவைப் பாடல்… ‘ஜம்புலிங்கமே ஜடாதரா… வாயுலிங்கமே அரோகரா...’

இப்படத்தின் நாயகர்களான முத்துரானும், ஸ்ரீகாந்தும் அவர்கள் வீட்டிலுள்ள மனோரமாவை ஏமாற்ற, டீக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு போலிச்சாமியார் வேடமிட்டு அழைத்து வந்து விடுவார்கள்...

மூவரும் சேர்ந்து பஜனை பாடல் பாடுவார்கள்... அப்போதுதான் இந்த கலக்கலான நகைச்சுவைப் பாடல் இடம் பெறும்...  கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்பாடலுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார். அதுமட்டுமின்றி...இப்படலில் மேற்கத்திய பாணி இசையை அழகாக உள்ளே நுழைத்திருப்பார் எம்.எஸ்.வி.

இப்பாடலில்... 'பஞ்சலிங்கமே மசால் வடா...', 'கோழிக்கறியைக் கேட்டவனே...' 'மதுக்கஷாயத்தைக் குடித்தவனே..' என்று வரும்... இந்த வரிகள் கொண்ட பாடலை, அப்போதிருந்த தணிக்கைத் துறையினர் கத்தரி போட்டனர். பின்பு, மசால் வடா - மடா படா என்றும்... கோழிக்கறி - ஓட்டல் கறி என்றும்... மதுக்கஷாயம் - மல கஷாயம் என்றும் மாற்றப்பட்டது...

நீங்கள் கேட்கவிருப்பது தணிக்கைக்கு முந்தைய பாடல்... கேட்டு மகிழுங்க... பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...



ஜம்புலிங்கமே ஜடாதரா... - நகைச்சுவைத் திரைப்பாடல் | Upload Music

நன்றி : திரு எம்.கே.ஆர். சாந்தாராம்... (தகவல் மற்றும் பாடல் உதவிக்கு)

இப்பாடலின் திரைவடிவம் இங்கே...


Jambulingame Jadaadaraa
Uploaded by comeupdowngo. - More college and campus videos.