ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label புஷ்பவனம் குப்புசாமி. Show all posts
Showing posts with label புஷ்பவனம் குப்புசாமி. Show all posts

Tuesday, 14 June 2011

செவலக்காளை ரெண்டு பூட்டி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்!




"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..!" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன். 


கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் மெல்லிசை கலந்த துள்ளலிசைப் பாடல்...


அக்காலத்தில் வயல்வெளிகளில் உழவு உழும் போதும், நாத்து நடும் போதும் களைப்பு தெரியாமல் இருக்க, தெம்மாங்கு பாடல்களை பாடி களைப்பு தெரியாமல் வேலையை முடிப்பார்கள். கூட இருக்கும் பெண்கள் குலவை போட்டு பாடுபவரை உற்சாகப் படுத்துவார்கள். அதை கேட்கும் சுகமே தனி சுகம்தான்.

இதுதான் இப்பாடலின் பின்னணி. எனது மாமன் உழவு செய்கிறான், அதற்கு ஏற்றாற் போல் நாற்று நடவேண்டும், சம்பா நெல் நடவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. தலைவியின் கூற்றை கூட இருக்கும் பெண்கள் குலவை இட்டு ஆமோதிக்கிறார்கள். தலைவனோ மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும் அதற்கும் குலவையிடுங்கள் என்கிறான். அதற்கும் குலவையிடுகிறார்கள்


நையாண்டி மேளம், உருமி, குலவை இசை, புல்லாங்குழல் என கிராமத்திற்கே உரிய வாசனையை இப்பாடலில் புகுத்தியிருப்பார் புஷ்பவனம் குப்புசாமி. கேட்க கேட்க பரவசப்படுத்தும் பாடல் இது....


எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



செவலக்காளை..! | Upload Music

(நன்றி: திரு. கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்)




Monday, 28 February 2011

ஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்


'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் அற்புதமான மெட்டமைப்பில், அவரது தெள்ளிய கிராமத்துக் குரலில் இப்பாடல் ஒலிக்கிறது... இவரது குழுவினரின் கோரஸும், ஹம்மிங்கும் நம்மை அழகாக ரசிக்க வைக்கும்.

இப்பாடலில் தமிழிசையினை மிகவும் அற்புதமாகப் பயன்படுத்தி இருக்கிறார் குப்புசாமி. புல்லாங்குழல் இசை தனி ஆவர்த்தனம் செய்கிறது.

படிக்காமல் போன கிராத்து விவசாயி ஒருவர், இளம் பிராயத்தில் படிக்காமல் விட்டுவிட்டால் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மிக அழகாக இப்பாடலில் உணர்த்துகிறார் புஷ்பவனம்.

மெல்லிசை கலந்த கிராமியப் பாடலை கேட்க ஆசையெனில் இப்பாடலைக் கேளுங்க. தங்களுக்கு பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...


ஏலக்காயாம் ஏலேரீசாம்..! | Musicians Available

(நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்)




Thursday, 17 February 2011

கூட்டு வண்டி காளை போல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!




கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை உருக்கும் காதல் சோக கீதம்தான் இந்த 'கூட்டு வண்டி காளை போல..!' எனும் பாடல்... 

2004 முதல் புஷ்பவனத்தாரின் பாடல் சிடியை வைத்துக் கொண்டிருக்கிறேன்... இத்தனை வருடங்களும் இந்த முத்தான பாடல் என் கண்ணில் படவில்லை, காதில் கேட்கவில்லை... அண்மையில் ஒவ்வொரு பாடலாக கேட்டபோதுதான் இப்பாடலைக் கண்டுகொண்டேன். அடடா இத்தனை நாள் இப்பாடலை கேட்காமல் போனோமே என்று என்னை நானே நொந்து கொண்டேன்...

இப்பாடலைக் கேட்டதும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது... என் காதல் தோல்வியும்... இப்பாடலின் வரிகளும், இசையும் என்னை உருக்கி விட்டன என்பதே இதன் சாராம்சம்.

(காதல் தோல்வி அடைந்த ஒவ்வொரு ஆண்மகனுக்கும்,  இப்பாடல் அவனது பழைய காதல் நினைவுகளை, கண்டீப்பாக அவன் முகத்தில் விசிறியடிக்கும்...)

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  (சங்கதி வைத்துப் பாடும் குரலைக் கேளுங்களேன்...) உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை விவசாயியின் வாகனமான மாட்டு வண்டியோடும் குளம், கொக்கு, மீன், குண்டு மல்லி போன்றவற்றோடும் இணைத்துப் பாடுகிறார்...


அவரின் சோகத்தைப் புல்லாங்குழல் இசையும், மாட்டின் கழுத்தில் இருக்கும் சலங்கை ஒலி இசையும், கஞ்சிரா இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு கிராமத்து மனிதனுடைய காதல் தோல்வியை...!

உங்களுக்குப் பிடித்திருப்பின் இந்த முத்துப் பாடலை இலவசமாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.. அதாவது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!


கோடான கோடி நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர் 




Wednesday, 17 November 2010

ஏ புள்ள ராசாத்தி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்களை மட்டுமல்ல உங்களு காதையும் ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. நாதஸ்வரம், புல்லாங்குழல் என கிராமிய இசை பின்னியெடுக்கும்... அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

'ஏ புள்ள ராசாத்தி... என் பாட்ட கேளாத்தி... ஏரிக்கரை பக்கம் வாடி ஏலே செல்லம்மா..' என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிசிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


ஏ புள்ள ராசாத்தி...! | Upload Music

நன்றி: திரு. புஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமி



Wednesday, 4 August 2010

தாமரை தெப்பத்துல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்க காதை ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. உருமி மேளம் என கிராமிய இசை பின்னியெடுக்கும்...  அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

தாமரை தெப்பத்துல... தலைமுழுகி போற புள்ள.. நீ குளிக்கும் தெப்பத்தில நான் குளிச்சா ஆகாதோ..? என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


தாமரை தெப்பத்துல..! | Musicians Available

நன்றி: 'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி & குழுவினர்



Tuesday, 2 March 2010

ஆத்தோரம் தேக்கு மரம்..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'ஆத்தோரம் தேக்கு மரம்..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நம் மூவேந்தர்களின் காலமான பாண்டியர், சோழர், சேரர் காலத்தில் நடைபெற்ற விவசாயமும்... அதனால் விளைந்த நன்மைகளையும் பற்றி, அவரது குழுவினருடன் அழகாகப் பாடுகிறார்..!

இபுபாடலில் 'தங்கமே தை...லால..!' என சங்கதி வைத்து பாடும் புஷ்பவனம் குப்புசாமியின் குரல் கிராமியத் தேன் பாகு...!

சலங்கை இசை, குழலிசை என மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க...  தேவையெனில் தரவிறக்கமும் செஞ்சிக்கோங்க..!



நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்




Thursday, 25 February 2010

சந்தையில வாங்கி வந்த..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'சந்தையில வாங்கி வந்த சரி ஜோடி காளைகளா..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, ஒரு கிராமத்து இளைஞனின் காதலை, அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அழகை மிக அழகாகப் பாடுகிறார்... அதுவும் அந்த இளைஞன் அவனது காளைகளுடன் பேசிக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இப்பாடல்.!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!




சந்தையில வாங்கி வந்த... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர் 




Monday, 22 February 2010

ஆத்து மணலிலே கோட்டை கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'ஆத்து மணலிலே கோட்டை கட்டி..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிக அழகாகப் பாட, அதை அப்படியே அவரது பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுகிறார்கள், மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல்... போகப் போக துள்ளலிசைப் பாடலாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன் கலந்த துள்ளலிசைப் பாடலாக... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!


ஆத்து மணலிலே கோட்டை கட்டி... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Thursday, 18 February 2010

அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..!'

எப்பாடலிலும் பாடகர் பாடியதைத்தான், பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுவார்கள்... இப்பாடலில் அப்படியில்லை... பாடகர் பாடுவதை குழுவினர் பாடுவர், பின் குழுவினர் பாடுவதை பாடகர் பாடுவார்...துள்ளலிசையின் ஆரம்பிக்கும் பாடல்... போகப் போக துடிப்பான இசையாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டுப் பாருங்க... அப்புறம் சொல்வீங்க..!


அறிவோம் நன்றாக..! | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்.



Tuesday, 16 February 2010

தமிழா... நீ பேசுவது தமிழா..! - தமிழிசைப் பாடல்!


தமிழா... நீ பேசுவது தமிழா..! என்ற பாடல்தான் இது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடல் இது, இசையமைத்து, பாடியிருப்பவர் நம் கலைமாமணி திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்...

இப்பாடலில் ஆங்கில வார்த்தைகள் எப்படி நம் தமிழை சிதைத்து ஊடுருவியுள்ளன என்பதை கவிஞர் கோபத்துடன் எழுதியுள்ளார், அதை அப்படியே தம் குரலில் பிரதிபலித்துக் காட்டியுள்ளார் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்..!

அன்பு நண்பர் அமுதநேசன் அவர்கள் மின்னஞ்சல் மூலம் என்னிடம் வேண்டுகோள் விடுத்த பாடல்தான் இந்த 'தமிழா... நீ பேசுவது தமிழா..! எனும் பாடல்.

இந்த பாடலை மிகத் தாமதமாக வழங்குவதற்கு மன்னிக்க வேண்டும் அமுதநேசன்... எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும், இப்பாடலை எனக்கு வழங்கிய நண்பர் தமிழ் சாந்த குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்...

இப்படலை கேட்டுப் பாருங்கள்... வேண்டுவோர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்..!

இதோ அப்பாடல்...


தமிழா... நீ பேசுவது தமிழா..! | Music Upload

-------------------------
Hi

Pl help me download the song "TAMIZHA NEE PESUVATHU TAMIZHA" sung by thenisai Chellappa and written by kasi Ananthan.

I visited your blog and found it very informative and useful. Pl continue the good work.

Regards

S J Amuthanesan



Tuesday, 29 December 2009

திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசைப் பாடல்களில் ஒன்றுதான் இந்த 'திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..!'

துள்ளலிசை மட்டுமின்றி, ஒரு கிராமத்து மனிதனின் கோழைத்தனத்தை எவ்வளவு நையாண்டித்தனமாக, கேலித்தனமாக தன் பாடல் வழியே எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார் என்பதை நீங்களே கேளுங்கள்...


திருப்பதிக்கு போயி வந்தேன்..! | Upload Music

நன்றி:  'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்



Wednesday, 23 December 2009

ஆலமரமுறங்க...! அடிமரத்துப் பாலுறங்க..! - கிராமியப் பாடல்


கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை வருடும் காதல் சோக கீதம்தான்  'ஆலமரமுறங்க.. அடிமரத்துப் பாலுறங்க..!' என்னும் இப்பாடல்...

இப்பாடலை 2004-ல் முதன் முதலாகக் கேட்டேன். (பண்ருட்டி அருகே) கண்டரக்கோட்டையில் உள்ள எனது தேவதையின் கணினி மையத்தில், அவளுடன் இருந்தபோது கேட்டேன்.. அப்போதே இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது...

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை அந்த வயல்வெளி, ஆத்தாங்கரை போன்ற இயற்கை சூழல்களோடு பாடுகிறார்.. அவரின் சோகத்தை புல்லாங்குழல் இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு விவசாயினுடைய காதல் தோல்வியை...!



ஆலமரமுறங்க..! | Upload Music

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்




Tuesday, 1 December 2009

கொல்லையிலே கம்பெடுத்து..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி திருமதி அனிதா குப்புசாமி அவர்களும் சேர்ந்து பாடும் எசப்பாட்டுதான் இந்த 'கொல்லையிலே கம்பெடுத்து' பாடல்... தேமதுரத் தமிழின்  தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் எசப்பாட்டு பாடல்...


கணவனிடம் வயல் காட்டில் பணி செய்யலாம் வாங்க என மனைவி அழைக்க... கணவனோ...சில காரணங்களை சொல்லி வரமுடியாது என்கிறான்... ஏட்டிக்குப் போட்டியாக பாடலில் இருவரும் விளையாடும் அழகு... அசத்தல் போங்க...


ஆரம்பத்தில் பழைய சினிமாவில் வரும் இசையைப் போல் வரும்..பிறகு துள்ளலிசையாக மாறும்... கேட்டுப் பாருங்க... கருத்தைச் சொல்லுங்க...



கொல்லையிலே கம்பெடுத்து..! | Online recorder

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Monday, 30 November 2009

கொல்லையிலே கொய்யாமரம்..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்தில் மெல்லிசையாகவும், அப்படியே துள்ளலிசையாக மாறும் பாருங்கள்.. அடடா... தமிழிசை... தமிழிசைதான்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



கொல்லையிலே கொய்யாமரம்..! | Upload Music



Wednesday, 25 November 2009

தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனைவியான அனிதா குப்புசாமி அவர்களின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் கும்மிப் பாடல்...

தமிழ்க்கீர்த்தனை போல் ஆரம்பத்தில் ஆலாபனையும், ராக தாளமும்... உங்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல் | Music Upload


நன்றி: திருமதி அனிதா குப்புசாமி, 'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி குழுவினர்



Monday, 23 November 2009

சீரகம் பாத்தி கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மற்றுமொரு சோக மயமான ஆனால் அற்புதமான காதல் கீதம்...

தன் காதலி பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தவள்.. தான் ஏழை என்றறிந்தும் காதலால் அவனுக்கு மனைவியானாள்... அவள் வீட்டில் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்தாள் என்பதையும், அவளை தான் எப்படி வைத்து காக்கிறான் என்பதையும் மிக அழகாக... கிராமத்து மணம் கமழ.. கிராமிய இசையோடு ஒலிக்கும் பாடல்தான்...

'சீரகம் பாத்தி கட்டி... செடிக்குச் செடி குஞ்சம் கட்டி...'

கேட்டு மகிழுங்க.. மறக்காம உங்க கருத்தையும், வேண்டிய பாடலையும் பின்னூட்டத்துல சொல்லுங்க...


சீரகம் பாத்தி கட்டி..! | Upload Music

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி



Monday, 9 November 2009

தித்திரித்திரி பொம்மக்கோ…! -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்

தித்திரித்திரி பொம்மக்கோ…! தில்லாலங்கடி பொம்மக்கோ..! -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் பாடல்...

நாம் சிறு வயதில் (கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு தெரியும்)  ' ஏர் ஓட்டும் மானுக்கு எண்ணி வையி பத்து... சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு போட்டு மொத்து...' போன்ற கிராமியக் கதை சொல்லாடல்களை அழகாக, இப்பாடலில் பயன் படுத்தி இருப்பார் புஷ்பவனம் குப்புசாமி..

பாடலின் ஆரம்பமே துள்ளலிசையோடு உங்களை ஆட வைக்கும் படி இருக்கும்...கேட்டுப் பாருங்களேன்...


தித்திரித்திரி பொம்மக்கோ..! | Online recorder



Friday, 30 October 2009

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல்


கிராமிய கீத மன்னன் திரு. புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசையை அள்ளித் தெளிக்கும் மிக அற்புதமான கிராமியப் பாடல்… ‘ஒண்ணும்… ஒண்ணும்… ரெண்டுதான்…’.

பாடல் ஆரம்பித்தது முதல் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ஆடவைக்கும் பாடலைச் சேர்ந்தது இப்பாடல். இதன் கிராமிய இசை உங்களை துள்ளாட்டம் போட வைக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை... கேட்டு மகிழுங்கள் இந்தப் பாடலை...

முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்...


ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல் | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்



Thursday, 29 October 2009

தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! - கிராமியப் பாடல்


கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் சிறந்த பாடல்களில் இதுவும் ஓன்று... 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன்..!

தன்னுடைய காதலியை மணம் முடிப்பதற்காகவும், அதற்க்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், ஆசைகளும், அவர் எண்ண ஓட்டங்களும் எங்கெங்கு செல்கிறது என்பதை அப்படியே மண் மணம் மாறாமல் கிராமத்து துள்ளலிசையோடு கொடுத்திருக்கிறார்... கேட்டு மகிழுங்கள்..!

அன்பு நண்பர் ராப் அவர்கள் கேட்ட இப்பாடலை, அவர் கேட்ட மறுதினமே வலையேற்றம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

உங்களுக்கு வேண்டிய பாடல்களை கேளுங்கள்... முடிந்தால் பின்னூட்டமிடவும்...


தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! | Online recorder

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்