ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday 17 February 2011

கூட்டு வண்டி காளை போல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!




கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை உருக்கும் காதல் சோக கீதம்தான் இந்த 'கூட்டு வண்டி காளை போல..!' எனும் பாடல்... 

2004 முதல் புஷ்பவனத்தாரின் பாடல் சிடியை வைத்துக் கொண்டிருக்கிறேன்... இத்தனை வருடங்களும் இந்த முத்தான பாடல் என் கண்ணில் படவில்லை, காதில் கேட்கவில்லை... அண்மையில் ஒவ்வொரு பாடலாக கேட்டபோதுதான் இப்பாடலைக் கண்டுகொண்டேன். அடடா இத்தனை நாள் இப்பாடலை கேட்காமல் போனோமே என்று என்னை நானே நொந்து கொண்டேன்...

இப்பாடலைக் கேட்டதும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது... என் காதல் தோல்வியும்... இப்பாடலின் வரிகளும், இசையும் என்னை உருக்கி விட்டன என்பதே இதன் சாராம்சம்.

(காதல் தோல்வி அடைந்த ஒவ்வொரு ஆண்மகனுக்கும்,  இப்பாடல் அவனது பழைய காதல் நினைவுகளை, கண்டீப்பாக அவன் முகத்தில் விசிறியடிக்கும்...)

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  (சங்கதி வைத்துப் பாடும் குரலைக் கேளுங்களேன்...) உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை விவசாயியின் வாகனமான மாட்டு வண்டியோடும் குளம், கொக்கு, மீன், குண்டு மல்லி போன்றவற்றோடும் இணைத்துப் பாடுகிறார்...


அவரின் சோகத்தைப் புல்லாங்குழல் இசையும், மாட்டின் கழுத்தில் இருக்கும் சலங்கை ஒலி இசையும், கஞ்சிரா இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு கிராமத்து மனிதனுடைய காதல் தோல்வியை...!

உங்களுக்குப் பிடித்திருப்பின் இந்த முத்துப் பாடலை இலவசமாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.. அதாவது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!


கோடான கோடி நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர் 




No comments: