ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 30 October 2009

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல்


கிராமிய கீத மன்னன் திரு. புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசையை அள்ளித் தெளிக்கும் மிக அற்புதமான கிராமியப் பாடல்… ‘ஒண்ணும்… ஒண்ணும்… ரெண்டுதான்…’.

பாடல் ஆரம்பித்தது முதல் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ஆடவைக்கும் பாடலைச் சேர்ந்தது இப்பாடல். இதன் கிராமிய இசை உங்களை துள்ளாட்டம் போட வைக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை... கேட்டு மகிழுங்கள் இந்தப் பாடலை...

முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்...


ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல் | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்



Thursday 29 October 2009

தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! - கிராமியப் பாடல்


கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் சிறந்த பாடல்களில் இதுவும் ஓன்று... 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன்..!

தன்னுடைய காதலியை மணம் முடிப்பதற்காகவும், அதற்க்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், ஆசைகளும், அவர் எண்ண ஓட்டங்களும் எங்கெங்கு செல்கிறது என்பதை அப்படியே மண் மணம் மாறாமல் கிராமத்து துள்ளலிசையோடு கொடுத்திருக்கிறார்... கேட்டு மகிழுங்கள்..!

அன்பு நண்பர் ராப் அவர்கள் கேட்ட இப்பாடலை, அவர் கேட்ட மறுதினமே வலையேற்றம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

உங்களுக்கு வேண்டிய பாடல்களை கேளுங்கள்... முடிந்தால் பின்னூட்டமிடவும்...


தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! | Online recorder

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Wednesday 28 October 2009

தோட்டுக்கடை ஓரத்திலே... - கிராமியப்பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் சிறந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று...

'தோட்டுக்கடை ஓரத்திலே..... தோடு ஒண்ணாங்க...' என்றபடி... துள்ளலிசையோடு ஆரம்பிக்கும் பாடல், கடைசி வரை அந்த தாளத்தை அற்புதமாக கையாண்டிருப்பார்கள்...

கேட்டு மகிழுங்கள்... கருத்துரையிடுங்கள்...


தோட்டுக் கடை ஓரத்திலே... | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர்



Tuesday 27 October 2009

சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..! - திரைப்படப் பாடல்


சிறைச்சாலை படத்தில் அந்தமான் சிறையில் இருக்கும் காதற்க் கணவன், தமிழகத்தில் இருக்கும் தன் மனைவியை நினைத்துப் பாடும் பாடல்… மனைவியும் பாடுகிறாள்...

'சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..!'

இப்பாடலில் காதல் மனைவியை சந்திக்க முடியாததால் ஏற்படும் நிகழ்வை கவிஞர் அழகான வரிகளில் கோர்த்துக் கொடுக்க... அதற்கேற்றாற் போன்ற மனதைப் பிழியும் இசையும்... தனிமையையும், ஏக்கத்தையும் காட்டும் குரல்களும்... அடடா... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்...


சுட்டும் சுடர்விழி பார்வையிலே..! | Online recorder



Tuesday 20 October 2009

தட்டு முட்டுப் பொட்டுக்காரா... ராசா..! - கிராமியப் பாடல்

'தன்னானே... நானன்னானே... தன்னன்னானே... தட்டு முட்டுப் பொட்டுக்காரா..!' விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினருன் அருமையான கிராமியப் பாடல் இது…

காதலனும்… காதலியும் ஒருவரையொருவர் வர்ணித்துப் பாடும் பாங்கும்… அதற்கேற்றாற் போன்ற நமது கிராமத்து துள்ளலிசையும்… அடடா… கேட்டுப் பாருங்க…

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்



தட்டு முட்டு பொட்டுக்காரா... ராசா..! | Online recorder

(முடிந்தால் பின்னூட்டமிடுங்களேன்)



ஏ... ஆக்காட்டி... ஆக்காட்டி... - நாட்டுப்புறப் பாடல்..!

பேராசிரியர் குணசேகரன்

‘தவமாய்த் தவமிருந்து’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஜெயா மூர்த்தி அவர்களின் அற்புதமான குரலில் பாடிய இந்த பாட்டு புதுவை பல்கலை கழக பேராசிரியர் குண சேகரன் அவர்கள் தொகுத்த நாட்டுப்புறப்பாட்டு.

இதன் உரிமையாளரின் அனுமதி இன்றி இப்படத்தில் பயன்படுத்த முற்பட்டதால், நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. அதனால் இப்பாடல், அப்படத்திலிருந்தே நீக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக அப்படப்பாடல்களைக் கொண்ட குறுந்தகடுகளில் அப்பாடல் இடம்பிடித்திருந்தது. அன்று கேட்ட பாடல் இது… இது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் அருமையான பாடல்….

பாடகரின் குரலில் சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் அப்படியே உங்கள் கண் முன்னே நிறுத்தும்…. நாட்டுப்புறப் பாட்டென்றால் இதல்லவா பாட்டு என உங்களைச் சொல்ல வைக்கும்…. கேட்டுப் பாருங்கள்…

நன்றி: புதுவை பல்கலைகழக பேராசிரியர் குண சேகரன்



ஏ... ஆக்காட்டி... ஆக்காட்டி... | Upload Music

முடிந்தால் பின்னுட்டமிடுங்கள்...

இந்த பாடலின் திரை வடிவம் காண...: https://www.youtube.com/watch?v=we_uT_WTDC4