ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday 28 February 2011

ஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்


'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் அற்புதமான மெட்டமைப்பில், அவரது தெள்ளிய கிராமத்துக் குரலில் இப்பாடல் ஒலிக்கிறது... இவரது குழுவினரின் கோரஸும், ஹம்மிங்கும் நம்மை அழகாக ரசிக்க வைக்கும்.

இப்பாடலில் தமிழிசையினை மிகவும் அற்புதமாகப் பயன்படுத்தி இருக்கிறார் குப்புசாமி. புல்லாங்குழல் இசை தனி ஆவர்த்தனம் செய்கிறது.

படிக்காமல் போன கிராத்து விவசாயி ஒருவர், இளம் பிராயத்தில் படிக்காமல் விட்டுவிட்டால் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மிக அழகாக இப்பாடலில் உணர்த்துகிறார் புஷ்பவனம்.

மெல்லிசை கலந்த கிராமியப் பாடலை கேட்க ஆசையெனில் இப்பாடலைக் கேளுங்க. தங்களுக்கு பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...


ஏலக்காயாம் ஏலேரீசாம்..! | Musicians Available

(நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்)




Monday 21 February 2011

பூங்காத்து திரும்புமா...? - மலேசியா வாசுதேவன் சிறப்புப் பதிவு..!


'பூங்காத்து திரும்புமா..? என் பாட்டை விரும்புமா..?' என்ற பாடலை மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடலை இன்று பதிவிலிடுகிறேன்...

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1985-ல் வெளி வந்த திரைப்படம் 'முதல் மரியாதை'

இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் முத்துக்கள் என்றே சொல்லலாம். அதில் சிறப்புப் பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம்... இப்பாடல் தேசிய விருது பெற்ற பாடலாகும். (வைரமுத்துவிற்கு கிடைத்தது)

வைரமுத்துவின் வரிகளுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, 'அமரர்' மலேசியா வாசுதேவன் குரல் வழியே உயிர் கொடுத்திருப்பார்... நெஞ்சை உருக்கும் படி இருக்கும் அவரது குரல்...

நேற்றைய தினம் (20.02.2011) மறைந்த திரு. மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு இனிய தமிழ்ப்பாடல்கள் தளம் சார்பிலும், இதன் வாசகர்கள் சார்பிலும் இப்பாடல் மூலம் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்...

இனி இந்த இசைப் பூங்காத்து திரும்புமா..?


பூங்காத்து திரும்புமா..? | Upload Music

மலேசியா வாசுதேவனைப் பற்றி சில வரிகள்

@ மலையாள பூமியை பூர்வீகமாக கொண்டவர், மலேசியாவில் பிறந்தவர். மலேசிய நாடகங்களில் நடித்தவர், சினிமா மேல் பற்று கொண்டு சென்னை வந்தவர், இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ் குழுவில் இணைந்து பின் சினிமாத் துறையில் காலடி வைத்தவர். 8000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்' என்ற படத்தில் "பாலு விக்கிற பத்தம்மா..." என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.
ஆனால் அதற்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே' படத்தில் கமல்ஹாசனுக்காக அவர் பாடிய "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.


@ ரஜினிகாந்திற்கு அதிகமான பாடல்களைப் பாடியவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்'. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்பட பல கதாநாயகர்களுக்கு பிண்ணனி பாடியவர்.  கலைமாமணி பட்டம வென்றவர்.

மலேசியா வாசுதேவனைப் பற்றி பிரபலங்கள் சொன்னவை...


@ 'என் நடிப்புக் கேத்த அழுத்தக் குரல் இவன்கிட்டதான்யா இருக்கு..' - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
தன்னுடைய பெயரால் ஒரு நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் 'மலேசியா' வாசுதேவன் - இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ்

@
என்னை முதன்முதலாக இசையமைப்பாளராக ஆக்கியதே அவர்தான். அவர் கதை, வசனம் எழுதி ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை' என்ற படத்தில்தான் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

பாடகர்
, இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், எனக்கு அவரிடம் பிடித்தது அரிதாரம் பூசாத நல்ல மனிதன் என்பதுதான் - கங்கை அமரன்

@ மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எடுப்பதாக இருந்த ஒரு படத்தில் வாலியின் வரிகளில் ஒரு பாடலைப் பாட வைத்தார் இளையராஜா. எம்.ஜி.ஆருக்கு வாசுவின் குரல் மிகவும் பிடித்துவிட்டது. இவரை முன்பே என்னிடம் அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை. அந்தளவிற்கு எம்.ஜி.ஆரை தன் குரலால் கவர்ந்து விட்டார் மலேசியா வாசுதேவன். 




Thursday 17 February 2011

கூட்டு வண்டி காளை போல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!




கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை உருக்கும் காதல் சோக கீதம்தான் இந்த 'கூட்டு வண்டி காளை போல..!' எனும் பாடல்... 

2004 முதல் புஷ்பவனத்தாரின் பாடல் சிடியை வைத்துக் கொண்டிருக்கிறேன்... இத்தனை வருடங்களும் இந்த முத்தான பாடல் என் கண்ணில் படவில்லை, காதில் கேட்கவில்லை... அண்மையில் ஒவ்வொரு பாடலாக கேட்டபோதுதான் இப்பாடலைக் கண்டுகொண்டேன். அடடா இத்தனை நாள் இப்பாடலை கேட்காமல் போனோமே என்று என்னை நானே நொந்து கொண்டேன்...

இப்பாடலைக் கேட்டதும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது... என் காதல் தோல்வியும்... இப்பாடலின் வரிகளும், இசையும் என்னை உருக்கி விட்டன என்பதே இதன் சாராம்சம்.

(காதல் தோல்வி அடைந்த ஒவ்வொரு ஆண்மகனுக்கும்,  இப்பாடல் அவனது பழைய காதல் நினைவுகளை, கண்டீப்பாக அவன் முகத்தில் விசிறியடிக்கும்...)

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  (சங்கதி வைத்துப் பாடும் குரலைக் கேளுங்களேன்...) உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை விவசாயியின் வாகனமான மாட்டு வண்டியோடும் குளம், கொக்கு, மீன், குண்டு மல்லி போன்றவற்றோடும் இணைத்துப் பாடுகிறார்...


அவரின் சோகத்தைப் புல்லாங்குழல் இசையும், மாட்டின் கழுத்தில் இருக்கும் சலங்கை ஒலி இசையும், கஞ்சிரா இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு கிராமத்து மனிதனுடைய காதல் தோல்வியை...!

உங்களுக்குப் பிடித்திருப்பின் இந்த முத்துப் பாடலை இலவசமாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.. அதாவது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!


கோடான கோடி நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர் 




Wednesday 16 February 2011

வரான் வரான் பூச்சாண்டி..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

இரண்டுபேர் படத்தில் குஷ்பு, ரோஜா

'வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே..!' என்ற பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

2003-ல் வெளிவர இருந்த 'இரண்டு பேர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளலிசைப் பாடல் இது...

இப்பாடலை எழுதி, பாடியவர் ஆபாவாணன். இசை சுனில் வர்மா. பாட்டைக் கேட்டுப் பாருங்க... அட்டகாசமாய் எழுதியது மட்டுமின்றி... அருமையாகவும் பாடியிருக்கிறார்.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!

-----------------------------------------------
Anonymous Ramachandran said...


dear moganan,


i appreciate your interest of songs

thanks for your old tamil songs while listening that i forget surroundings regrds

request to post one song "vaaran vaaran poochandi mattu vandiyile" i heard this song in sun tv asatha povadhu yaaru programme. whether this is film song or folk song please post

ramachandran, kgf
23 December 2010 18:21
------------------------------------
இப்படம் குறித்த தகவல்கள்..!

@இப்படத்தின் இஞை அமைப்பாளர் சுனில் வர்மா. இவர் க்யான் வர்மாவின் மகன். க்யான் வர்மா, மனோஜ்-க்யான் என்ற பெயரில் இசை அமைத்த இரட்டையரில் ஒருவர். ஊமை விழிகளில் இவர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஆபாவாணன்.


@ 'இரண்டு பேர்' திரைப்படக் குழு


நடிக நடிகையர்: ராம்கி, குஷ்பு, ரோஜா, சங்கவி, நாசர், செந்தில், பிரதாப் போத்தன் மற்றும் பலர்

கதை - இந்துமதி, ஒளிப்பதிவு - சுரேஷ் குமார், தயாரிப்பு - தேன்மொழி ஆபாவாணன், திரைக்கதை, பாடல்கள் மற்றும் இணை இசை - ஆபாவாணன்

இசை - சுனில் வர்மா (இசையமைப்பாளர் கியான் வர்மாவின் புதல்வர் - மனோஜ்-கியான் இரட்டையர்கள்), இயக்கம் - எஸ்.டி.சபாபதி


@2003ல் அந்தப் படம் வந்திருக்க வேண்டும்.வந்த மாதிரி தெரியவில்லை.ஆபாவாணன் ஒரு படம் எடுத்து பெரும் நஷ்டம் அடைந்தார்.அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய இந்துமதி படத்தின் தயாரிப்பிற்கு உதவியதால் நஷ்டமடைந்தார்.பின்னர் கங்கா-யமுனா-சரஸ்வதி என்ற சீரியலை எடுத்தார்.


@ ஆபாவாணன் படம் இது. பாடலைப்பாடியவரும் அவரே. இந்த நிமிடம் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி லேபில் தூங்கிக் கொண்டிருக்கிறது படம்! உலகத்திரைக்காட்சிகளில் இன்னும் வெளிவராத படம் இது!! இனியும் வருமா என்பதும் சந்தேகமே. காரணம்.. படத்தில் நடித்தபோது குஷ்பு, ரோஜாவுக்கெல்லாம் கல்யாணமே ஆகியிருக்கவில்லை. பாக்கியிருக்கும் காட்சிகளை இப்போது எடுப்பதானால் கண்டினியுட்டி கழுதை உதைக்கும்.


@படைப்பாளியின் அனுமதியோ அல்லது பெயர் மரியாதையோ இன்றி பாடலைச் சுட்டு, அதற்கான காட்சிகளையும் ஆங்கில அனிமேஷன் படங்களில் இருந்து சுட்டெடுத்து வெட்டி ஒட்டி புத்தம்புதிய காப்பியாக்கியிருக்கிறார்கள்! அது இணையத்தில் 2008 - லேயே சூப்பர் ஹிட் ஆனது..!


@கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் முதல் காட்சியில் இந்தப் பாடல் நான்கு வரிகள் வரும்.


(நான் நன்கு விசாரித்து, எனக்குத் தெரிந்த வரையில் இப்படத்தின் தகவல்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் தவறு இருப்பின் தக்க ஆதாரத்துடன் இணைய வாசகர்களை சுட்ட வேண்டுகிறேன்...)




Tuesday 8 February 2011

ஆசையே அலை போலே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)



ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே..! என்ற அற்புதமான பாடலை, இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..!


ஜனவரி
14, 1958, தைத் திருநாளன்று ஏ.கே.வேலன் கதை, திரைக்கதை, இயக்கம் தயாரிப்பில் வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

கவியரசர் கண்ணதாசனில் வைர வரிகளுக்கு
, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் அட்டகாசமான இசையமைப்பில், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடலிது...

இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும்
, இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வும் பற்றி எளிதாக விளக்கி விடுவார்... வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்... அந்த வரிகள்....

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?’

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட பழனிவேல் கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது நன்றிகள். இப்பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும். உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.



ஆசையே அலை போலே..! | Upload Music

------------

Anonymous Palanivelu Krishnasamy said...

Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I am ar ardent fan of old songs. Recently, while travelling by a bus, I happened to hear a song sung by SP Balasubramaniam. That impressed me very much.


I tried in the net to find and get it downloaded but in vain. Will you please get it for me?
The song is AASAIYE ALAI POLE NAMELLAM ADHAN MELE (Resung of the old popular song)
Thank you.

K. Palanivelu
10 January 2011 10:41
-----------------------------

இனி சுவாரசிய செய்திகள்

@அக்காலத்தில் கோடம்பாக்கத்தில் ரயில்வே கிராஸிங் மட்டுமே இருந்தது. மேம்பாலம் கிடையாது. ரயில் வந்து செல்லும் வரை இருபுறமும் இரயில்வே கேட்டை பூட்டி விடுவார்கள். சினிமா பிரபலங்கள் எல்லோரும் அந்த கேட்டில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு முறை ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக, கண்ணதாசன் காத்திருந்த போது, இப்பாடலை சிகரெட் பாக்கெட்டில் எழுதி வைத்தாராம். சிகரெட் பெட்டியில் சிந்திய வரிகள்... பின்னாளில் தமிழக மக்களின் செவிகளிலும் தேனிசையாய் சிந்தியது இப்பாடல்.

@இப்பாடலின் இசையமைப்பாளர் திரை இசைத் திலகம். கே.வி.மகாதேவன் அவர்கள்... இவர் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார் ! பாட்டு எழுதும் கவிஞர்களை வதைக்காமல், அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பயன் படுத்துவார் ! அப்படி அந்த பாட்டு மெட்டுக்குள் அடங்கவில்லை என்றால் " விருத்தம் " ஆக்கி பாட்டின் சுவையைக் கூட்டிவிடுவார் !

@1940 களின் ஆரம்பத்தில் – கே.வி. மகாதேவன் அவர்கள் சேலம் ‘மாடர்ன் தியேடர்ஸ்
-ல் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்!

அப்போது அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் ஓர் இளைஞனை மகாதேவனிடம் அழைத்து சென்று "மகாதேவா
, இவருக்கு குரல் வளம் எப்படி இருக்கின்றது என்பதை பரீட்ச்சை செய்து அனுப்பு!" என்றார் !

மகாதேவனும் அந்த இளைஞன் குரலை சோதனை செய்து பின்னர் வரச் சொல்லிப் பணித்தார் ! அவர் அங்கேயே தயங்கி நிற்கவே " ஊருக்குப் போவதற்கு பணம் இருக்கா ? " என்று அவரைப் பார்த்து கேட்டார் ! அந்த இளைஞன் உதட்டைப் பிதுக்கவே , மகாதேவன் அந்த இளைஞனுக்கு 2 .00 ரூபாய் பணம் கொடுத்து, கூடவே ஒரு சட்டையும் கொடுத்து அனுப்பினார் !

அந்த இளைஞன் யார் தெரியுமா
?  - அவர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் !

@திருச்சி லோகநாதன் சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் பாட வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்ல, ‘மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர்தான் நம்ம டி. எம். செளந்தரராஜன்.