ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 31 December 2010

நல்லோர்கள் வாழ்வைக் காக்க..! - புத்தாண்டு சிறப்புப் பாடல்..!


'நல்லோர்கள் வாழ்வைக் காக்க... நமக்காக நம்மைக் காக்க... ஹேப்பி நியு இயர்..!' என்ற புத்தாண்டு பாடலை சிறப்புப் பதிவாக இன்று இடுகின்றேன்

1982 -ம் வருடம் தமிழ்ப்புத்தாண்டு அன்று, சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான சங்கிலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, தெரிந்திருப்பின் தகவல் தரவும். இசையமைப்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, பாடியவர் நமது டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள்...

இந்த தளத்திற்கு பேராதரவு தரும் எனதருமை இணைய வாசகர்களுக்கு... எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறி இப்பாடலைப் பதிவிலிடுகிறேன்... கேட்டு மகிழுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நல்லோர்கள் வாழ்வைக் காக்க..! | Upload Music

இனி இப்பாடலைப் பற்றிய சுவாரசியத் தகவல்கள்


@ 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் இளைய மகனான, 'இளையதிலகம்' பிரபு அறிமுகமான படம்தான் இந்த சங்கிலி. 

@ 'இளைய திலகம்' பிரபுவின் பிறந்த நாள் இன்று (31.12.1956).

@ 1970களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் (ஞாயிறு மதியம்) பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( அஞ்சலட்டையில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். 

10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம். 

இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்களில் ஒன்றுதான் இந்த சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க"  பாடல்.

*******

@ சிவாஜிகணேசனின் 223வது படம் "சங்கிலி",  பிரபுவிற்கு முதல் படம். இப்படத்தில் பிரபு முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இந்தப் படத்தை "அருண் சுஜாதா கம்பைன்ஸ்" பட நிறுவனம் தயாரித்தது. வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார். இந்தியில் வெளியான "காளிச்சரண்" என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். பிரபு நடிகரானது பற்றி பிற்காலத்தில் சிவாஜிகணேசன் கூறியதாவது:-

"பிரபு என் மகன். அவனைப்பற்றி நானே கூறுவது அவ்வளவு நன்றாக இருக்காது. எனினும், அவன் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன். "ஜாவலின் த்ரோ" என்ற விளையாட்டில் சேம்பியன். ஜாவலின் எறிந்தான் என்றால், கிரவுண்டை விட்டு வெளியே தூக்கி எறிந்து விடுவான்.

மிக வேகமாக ஓடுவான். டிராக்கில் ஓடினான் என்றால், ஒரு வெள்ளைக் குதிரை ஸ்லோ மோஷனில் ஓடி வருவது போல இருக்கும். அவனை மிகச் சிறப்பாக படிக்க வைத்து, ஒரு நல்ல போலீஸ் ஆபீசராக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். என் ஆசை நிறைவேறவில்லை.

எனக்குத் தெரியாமலேயே என் தம்பி சண்முகமும், டைரக்டர் சி.வி.ராஜேந்திரனும் திடீரென்று ஒரு நாள் வந்து, "இந்தப் புதுமுக நடிகனைப் பாருங்கள்" என்று கூறி பிரபுவை என் பக்கத்தில் நிறுத்திவிட்டார்கள். அதுவும் எனக்கு வில்லனாக! அந்தப்படம் தான் "சங்கிலி."

@ முதன் முதலாக மதுரை - அலங்கார் திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் - சங்கிலி. 

@ 14.04.1982 அன்று வெளியாகி 80 நாட்களை கடந்து ஓடிய சங்கிலி இலங்கையில் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது. 




Friday 24 December 2010

அச்சம் என்பது மடமையடா..! - பழைய திரைப்படப் பாடல் (எம்.ஜி.ஆர் நினைவுநாள் சிறப்புப் பாடல்)

'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...' என்ற பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 23-வது நினைவு தினமான இன்று... அவரது நினைவாக இப்பாடலை கனத்த இதயத்தோடு பதிவிலிடுகிறேன்...

நடேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம். நடேசன் அவர்களின் இயக்கத்தில் 19.10.1960 அன்று வெளியான மன்னாதி மன்னன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியே இப்பாடலாகத்தான் இருக்கும்... இப்பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது இப்படத்தின் டைட்டில்களும் வந்துவிடும்...

இப்படத்திற்கு பாடல்கள் மட்டுமல்ல கதைவசனத்தையும் கவியரசர் கண்ணதாசனே எழுதியிருக்கிறார்... (இப்படத்தின் சில பாடல்களை கவிஞர் மருதகாசியும் எழுதியிருக்கிறார்...) மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். டி.எம்.எஸ் அவர்கள் இப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்...

நமக்கென்று ஒரு வரலாறு உண்டு... வீரம் உண்டு... என்பதையும் திராவிடர்கள் எதற்கும் அஞ்சியதில்லை... இமயத்தையே அசைத்துப் பார்த்தவர்கள் என்ற பழங்கால சரித்திரத்தையும் இப்பாடலில் அழகாய்ப் புகுத்தியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


அச்சம் என்பது மடமையடா..! | Upload Music

இன்று இப்பாடல் வெளியிடக் காரணமும் இருக்கிறது...

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்...' - என்ற இப்பாடலின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்தாலும் மக்களின் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்...

இப்பாடல் குறித்த சில கண்ணீர்த் தகவல்கள்

@கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.க. நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது, “கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.


இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.


பின்னர் பேசும்போது,


“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது. சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

@எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலாகும்!

@ஒரு முறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப் பாடல் எது என்று கேட்டபோது... அவரின் முகம் நிலவு போல் மலர்ந்தது... தனக்கு சரியாக பாட வராது என்று சொல்லி விட்டு, தன் சிம்மக் குரலில் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு... நூறிலும் சாவு... தாயகம் காப்பது கடமையாடா...' என பாடிக் காட்டினார்... (இந்த மாவீரர் தாயகத்தை காப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்து விட்டார்...)

இந்த மூன்று சரித்திரங்களும் வாழ்ந்து மறைந்தாலும்... மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்..!

இப்பாடலின் திரைவடிவம் இதோ..!






Tuesday 21 December 2010

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'காலமிது காலமிது... கண்ணுறங்கு மகளே... காலமிதைத் தவற விட்டால்... தூக்கமில்லை மகளே... தூக்கமில்லை மகளே...' என்ற பாடலை, நேயர் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்....

1966-ல் வெளிவந்த சித்தி திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை அன்றைய வெற்றி இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்...

சித்தி என்றாலே கொடுமைக்காரி என்ற பொய்த்திரையை இப்படம் கிழித்தெறிந்தது. இப்படத்தில் நடிகை பத்மினி ஒரு தாய்க்கு நிகரான சித்தியாக வாழ்ந்து காட்டியிருப்பார்.இப்படத்தில் பத்மினியின் கணவராக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் படு அமர்க்களமாக இருக்கும்...

நாவல் ராணி, விடுதலைத் தியாகி, துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட வை.மு.கோதைநாயகி அவர்களுடைய கதைதான் இந்த சித்தி திரைப்படம்... இந்த படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது வை.மு.கோதைநாயகிக்கு அவர்களுக்கு, அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.

இனி பாடலுக்கு வருவோம்....

பெண்ணாக பிறந்தவளுக்கு தூக்கம் என்பது சிறு பிராயத்தில் மட்டுமே.. வளர வளர அவளது தூக்கம் தானாக ஓடிவிடும்... அவளது குடும்பம் நிம்மதியாகத் தூங்குவதற்கு, அவள் அவளது தூக்கத்தை துறக்கிறாள்... (இதை என் அன்னையிடம் நான் கண்டிருக்கிறேன்...) இதுதான் இந்த பாடலின் ஆதார சுருதி...

இதை நமது கவியரசு கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமாலையாக கோர்த்தெடுக்க, அம்மலையை இசையால் இழையவிட்டார் நமது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... இந்த வரிகளுக்கும்... இசைப்பிற்கும் குரல் மூலம் உயிரூட்டியவர் திருமதி பி. சுசீலா அவர்கள்...

குழந்தைகளுக்கு ஏற்ற தாலாட்டுப் பாடலாக ஒலிக்கும் இப்பாடலை நேயர் விருப்பமாக கேட்ட வீணா தேவிக்கு எனது நன்றிகள்... இவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... நன்றி..!

-----------------------------------


காலமிது... காலமிது...! | Upload Music

-----------------------------------

Anonymous Veena Devi said...

உங்கள் பாடல் தொகுப்பு மிக அருமை.. நன்றி.

"சித்தி" படத்தில் நடிகை பத்மினி படும் " காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே " பாடலும் ,


கே.ஆர் விஜயா பாடியிருக்கும்" தமிழுக்கும் அமுதென்று பேர் "(படம் தெரியவில்லை ) பாடலையும் தேடிக்கொண்டு இருக்கிறேன் ..

தங்களிடம் இருந்தால் அனுப்பவும்.நன்றி.

--
Cheers
Veena Devi
9 December 2010 14:37
--------------------------------------

(அன்பான வீணா தேவி அவர்களுக்கு... தாங்கள் கேட்ட இரண்டாவது பாடல் கே.ஆர்.விஜயா பாடவில்லை... பி.சுசீலா படிய பாடல்... இப்பாடலை ஏற்கனவே எனது பதிவில் பதிப்பித்திருக்கிறேன்... அதன் இணைப்பு இங்கே:  ''தமிழுக்கும் அமுதென்று பேர் - திரையிசையில் பாரதிதாசன் பாடல்'' 




Friday 17 December 2010

வரதப்பா... வரதப்பா... கஞ்சி வருதப்பா...! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

"வரதப்பா... வரதப்பா...  கஞ்சி வருதப்பா... " என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

1971 ஆண்டு, ஏ.சி. திரிலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த பாபு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளலிசைப் பாடல் இது.

வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளைகளுக்கு... மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க... அதற்கு தன் குரல் மூலம் உயிர் கொடுத்தவர் டி.எம். சௌந்திர்ராஜன் அவர்கள்...

இப்படத்தில் நடிகை விஜயஸ்ரீ ஒரு சாப்பாட்டு கூடைக்காரியாக நடித்திருப்பார். அலுவலகங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மிச்சமிருப்பதை கைரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளர்களுக்கு கொடுப்பவர். அதனால் ரிக்ஷாக்காரர்கள் அனைவரும், மதிய நேரத்தில் அந்தப்பெண்ணை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். அந்த நேரத்தில் அவரைக்கண்டதும்தான் அந்தப்பாடல்... 

இப்பாட்டிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் குத்தாட்டம் போட்டிருப்பார்... இவர் குத்தாட்டம் ஆடிய ஒரே ஒரு பாடல் இதுதான் என நினைக்கிறேன்... ஆட்டம் போல பாட்டும் கலக்கலாக இருக்கும்...
இபபாடலின் வரிகளில் வாலி சமத்துவத்தை சாதம் வடிவத்தில் கொடுத்திருப்பார்...


'குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது 

அது அனுமந்தராவ்............................
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது 

மேரியம்மா கேரியரில் எறா(ல்) இருக்குது 
அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கிடக்குது 
சமையல் எல்லாம் கலக்குது...........
அது சமத்துவத்தை வள(ர்)க்குது .......

சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா(ல்) பறக்குது' 

நண்பர் மணிகண்டனுக்கு பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...  உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள்...

--------

Anonymous Mani kandan said...

வணக்கம் தோழர் மோகனன் ,

ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும். எனக்கு "வருதப்பா.. வருதப்பா ... கஞ்சி வருதப்பா... இந்த கஞ்சி கலயம் கொண்டுகிட்டு வஞ்சி வருதப்பா... என்ற பாடல் வேண்டும். அல்லது அந்த படத்தின் பெயர் வேண்டும். பதில் அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி....


அன்புடன்,

சு. மணிகண்டன்
11 December 2010 10:31




Tuesday 14 December 2010

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள்...! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...! என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1967ல் கீழ வெண்மணியில் தலித் சமுதாயத்திற்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவத்தை முன் வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்ற ஒரு முக்கியமான நாவலை எழுதினார். இது 1983 -ல் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற ஒரு திரைப்படமாக உருவானது.

இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் ராஜன். இப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் யார் தெரியுமா..? கூத்துப்பட்டறையை நடத்தி வரும் நா. முத்துசாமி அவர்கள். தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் என வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர்தான் இப்படத்தின் கதை நாயகன்.

வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்திய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு இசைஞானி இளையாராஜா இசையமைப்பில், கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் உணர்ச்சி பொங்க பாடியிருப்பார்...


இந்த பாடல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்
பாடலின் ஆரம்பத்தில் வயலின் இசை மெல்ல ஆரம்பமாகும், அதுவே அரை நிமிடங்கள் ஓடியதால் அதை நீக்கிவிட்டு இங்கு கொடுத்திருக்கிறேன்...


இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட லெனின்அவர்களுக்கு எனது நன்றிகள்... அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...


மனிதா... மனிதா..! | Upload Music

--------
Anonymous Lenin k said...





வைரமுத்து பாடல்” மனிதா மனிதா இனி உண் விழிகள் சிவந்தால்” அனுப்பவும்.

நன்றி
14 December 2010 11:28




Friday 10 December 2010

சிட்டுப் போல பெண்ணிருந்தா..! - பழைய திரைப்படப்பாடல்


“மாமா… மாமா… மாமா…

ஏம்மா… ஏம்மா… ஏம்மா…
சிட்டுப் போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா?”

1961-ல், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் வெளியான, குமுதம் திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாட்டுகளும் அபார வெற்றி பெற்றவை... அதில் சிறந்த பாடல்தான் இந்த 'சிட்டுப் போல பெண்ணிருந்தா 'பாடல்... கிராமத்து இசை வடிவில் துள்ளலிசையைக் கொடுத்து, மக்களிடம் மகத்தான வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற பாடல் இது என்றால் அது மிகையல்ல...


எசப்பாட்டு வடிவில் காதலனும் காதலியும் பாடுகின்ற பாடல் இது... காதலன் காதலியின் கையை தொட முயல... அப்படி செய்யலாகுமா என காதலி கூறுகிறாள்... அட்டகாசமான துள்ளலிசை கலந்த இப்பாடலை இன்று கேட்டலும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கும்...


திரைக்கவித் திலகம் மருதகாசி எழுதிய இப்படாலுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்திருக்கிறார். இப்பாடலை டி.எம்.எஸ் அவர்களும் ஜமுனா ராணி அவர்களும் இணைந்து துள்ளும் குரலோடு பாடியிருப்பார்கள்... இவர்களுடன் கோரஸும் மிக அருமையாக இருக்கும்...


எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... 
உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்



சிட்டுப் போல பெண்ணிருந்தா..! | Upload Music




Friday 3 December 2010

இந்த பச்சைக்கிளிக்கொரு..! - திரைப்பாடப் பாடல் (நேயர் விருப்பம்)


'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்...' 1976-ல் வெளிவந்த நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் இடம் பெற்ற தாலாட்டுப் பாடல்...

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் தாயாராக பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி நடித்திருப்பார், அவர் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார். அப்பாடல் வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே ஒலிப்பதால் அதை நான் தேர்வு செய்யவில்லை..

எம்.ஜி.ஆருக்காக கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் குரல் கொடுக்க ஆரம்பித்த காலம் இது... இப்பாடலை எம்.ஜி.ஆருக்காக இவர் பாடினார்... கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இன்னிசையில் தாலாட்டிசையாக வரும் இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட அன்புத் தோழி கலையரசிக்கு எனது நன்றிகள்...

இப்பாடலில் இடம் பெறும் வரிகள் காலத்தால் மறையாத, மாற்றமுடியாத வரிகளாகும்...

''எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கயிலே...
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே...''

நீங்களும் கேட்டுப் பாருங்கள் இப்பாடலை...

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்



இந்த பச்சைக்கிளிக்கொரு... | Upload Music


----

Anonymous Kalaiarasi said...

Can you please provide 'Intha pachchai kilikku sevvandhi poovil thotilai katti vaipen' song from 'Needhikku thalai vanangu' movie which was sung by varalakshmi ?

kalaiarasi
9 September 2010 12:47