ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday 31 December 2009

செந்தமிழ் தேன் மொழியாள்..! - பழைய திரைப்படப் பாடல்

1958 -ல் வந்த படம் மாலையிட்ட மங்கை... அப்படத்தில் இடம்பெற்றதுதான் இந்த எவர்கிரீன் ஹிட் சாங்கான 'செந்தமிழ் தேன் மொழியாள்..!'

இப்படத்தின் நாயகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள். அக்காலத்தில் கதாநாயகனாக நடிப்பவரே பாடலை பாடவும் செய்ய வேண்டும். அதாவது பாடியபடியே நடிக்க வேண்டும்...


பாடுவதில் டி.ஆர்.மகாலிங்கம் ஒரு தனி முத்திரை பதித்தவர்... அக்காலத்தில்... மிக ராகமாக இழுத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்துதான் பாடுவார்கள்... அதை தகர்த்தெறிந்து, எளிமையான சொற்களை வைத்து மிக இனிமையாகப் பாடி எல்லோர் மனிதில் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல்தான் இந்த 'செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவெனச் சிரிக்கும் மலர்கொடியாள்...' பாடல்...

இப்படத்தை இயக்கியவர் G.R.நாதன். இப்பாடலுக்கு இசைச்சக்கரவர்த்திகளான எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துக் கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல, இன்றும், ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்..!

இப்பாடலை எழுதியது யார் தெரியுமா..?. இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசு கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான்.

என்ன ஆச்சர்யமா இருக்கா...! உண்மைதான்... எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்க்காக கண்ணதாசன் அவர்கள் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள்


இப்பாடலின் திரை வடிவம் (இதில் மூன்று சரணங்களும் இருக்கிறது என்பது தனிச் சிறப்பு)



Senthamizh Then Mozhiyal
Uploaded by justinraj. - College experience videos.


நன்றி: டெய்லி மோடன்



இப்படாலின் விருத்தம் பற்றிய சிறப்புத் தகவல்

'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே 
நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே' என்பது தமிழ்நாட்டில் கண்ணதாசனுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கிவந்த ஒப்பாரிப் பாடலாகும். கவியரசு அதைத் தன் பாட்டில் இணைத்தது எப்படி..?

இதோ அதற்கான பதில்...

'இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எஸ்.விசுவநாதனிடமிருந்து போன் வந்தது. "அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்கு... இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மனநிறைவா இல்லை. நேர்ல வாங்க... பாட்டைக் கேட் டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்...'' என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலைக் கேட் டார். பிரமாதமாக பாடியிருந்தார் டி.ஆர்.மகாலிங் கம். இருந்தாலும், ஒரு, 'பெப்' இல்லை என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர்.


"விசு... கொஞ்சம் பொறு!'' என்றபடி வெளியே வந்து, மரத்தடியில் இங்குமங்கும் நடந்தபடி இருந்தார். அப் போது, அவர் காலில் ஒரு நெரிஞ்சி முள் குத்திவிட்டது; குனிந்து முள்ளை பிடுங்கி எறிந்து விட்டு நிமிர்ந்தவர், "விசு... விசு...'' என, கூவியபடி ஒலிப் பதிவு அறைக்கு வந்து, எழுதச் சொன்னார்...


"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில் லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந் தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே...'' என்று விருத்தம் பாடி, "அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள் என, பாடலைத் துவங்கச் சொல்!'' என்றார்.


ஒப்பாரிப் பாடலை...அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா..!

அன்பு நண்பர் திரு. ராஷா அவர்களின் வேண்டுகோளின்படி இப்பாடலை இங்கே பதிவிலிடுகிறேன்.. கேட்டு மகிழுங்கள்..!









Blogger ராஷா said...
"செந்தமிழ் தேன் மொழியாள்" - இந்த பாடல் இருந்தா பதிவிடுங்க நன்பா - நன்றி
28 December 2009 13:49





Tuesday 29 December 2009

திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசைப் பாடல்களில் ஒன்றுதான் இந்த 'திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..!'

துள்ளலிசை மட்டுமின்றி, ஒரு கிராமத்து மனிதனின் கோழைத்தனத்தை எவ்வளவு நையாண்டித்தனமாக, கேலித்தனமாக தன் பாடல் வழியே எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார் என்பதை நீங்களே கேளுங்கள்...


திருப்பதிக்கு போயி வந்தேன்..! | Upload Music

நன்றி:  'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்



Sunday 27 December 2009

தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! - கானா பாடல்


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு...

இதோ நீங்கள் கேட்ட பாடல்... இது நாட்டுப்புற பாடல் அல்ல... சென்னையின் பூர்வீக மக்களின் பாடலான.. கானா பாடல்.. இதைப் பாடியவர் பழனி என்கிற கானா பாடகர். அவர் இன்னும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்...

'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் ''மாம்பழம் விக்கிற கண்ணம்மா... உன் மனசுக்குள்ள என்னம்மா..'' என்ற பாடலை (லுங்கியை மடித்துக் கட்டியபடியே, சற்று குள்ளமாக இருப்பவர்) பாடுவாரல்லவா.. அவர்தான் இப்பாடலைப் பாடிய பழனி...

உங்களின் ஆவலைப் பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.. கேட்டு மகிழுங்க... மறக்காம உங்க கருத்தைச் சொல்லுங்க..!


தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! | Music Upload

 நன்றி: (இப்பாடலைப் பாடிய) திரு. 'கானா' பழனி, (இப்பாடலை எனக்கு தேடிக் கொடுத்த) 'கானா' எட்வின் இன்பராஜ்
************************

//Blogger SUBBU said...

      அருமை நண்பரே, எனக்கொரு உதவி வேண்டும், ’தாத்தா தாத்தா கொஞ்சம்         பொடி குடு எந்தன் பேரா பேரா என் தடி எடு’ இந்த கிராமிய பாடல் வேண்டும்..!
8 December 2009 12:18 //
//Blogger மோகனன் said...


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி... கருத்திற்கும் மிக்க நன்றி... நீங்கள் கேட்ட பாடல் யார் பாடியது... திரைப்படத்தில் வந்த பாடலா... இதுபோன்ற கூடுதல் தகவல் எனக்குத் தேவை... இவைகளிருந்தால் என்னால் அப்பாடலை எடுத்துத் தர இயலும்... கொடுப்பீர்கள் என நம்புகிறேன்... அடிக்கடி கேட்க வாங்க..! 8 December 2009 12:31//
//Blogger SUBBU said...
கிட்டதட்ட ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் வந்த பாடல், சின்ன பையன் பாடிய பாடல், பேர் ஞாபகம் இல்லை, அந்த பையனை அடித்து கொன்று விட்டார்கள் :(( இது ஒரு நாட்டுபுற பாடல், எந்த படத்திலும் இடம் பெற வில்லை!//




Wednesday 23 December 2009

ஆலமரமுறங்க...! அடிமரத்துப் பாலுறங்க..! - கிராமியப் பாடல்


கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை வருடும் காதல் சோக கீதம்தான்  'ஆலமரமுறங்க.. அடிமரத்துப் பாலுறங்க..!' என்னும் இப்பாடல்...

இப்பாடலை 2004-ல் முதன் முதலாகக் கேட்டேன். (பண்ருட்டி அருகே) கண்டரக்கோட்டையில் உள்ள எனது தேவதையின் கணினி மையத்தில், அவளுடன் இருந்தபோது கேட்டேன்.. அப்போதே இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது...

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை அந்த வயல்வெளி, ஆத்தாங்கரை போன்ற இயற்கை சூழல்களோடு பாடுகிறார்.. அவரின் சோகத்தை புல்லாங்குழல் இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு விவசாயினுடைய காதல் தோல்வியை...!



ஆலமரமுறங்க..! | Upload Music

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்




Thursday 3 December 2009

ஏற்றமுன்னா ஏற்றம்... - பழைய திரைப்பாடல்..!


எம்.ஜி.ஆர் அவர்கள் 1961-ல் நடித்து வெளிவந்த படம் 'அரசிளங்குமரி'. இப்படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடல் ''சின்னப் பயலே..சின்னப்பயலே.. சேதி கேளடா..'', இதே படத்தில் உழவுத் தொழிலாளர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பு மிக்க பாடல்தான் இங்கு நான் பதிவிலிட்டிருப்பது... ''ஏற்றமுன்னா.. ஏற்றம்.. இதுல இருக்குது முன்னேற்றம்...'' என்ற பாடலைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன்...

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு வரிகளுக்கு திரு. ஜி. ராமநாதன் அவர்கள் கிராமிய இசை கலந்த மெட்டினை இப்பாடலில் இழையோட விட்டார்.  இப்பாடலை திரு. டி.எம். சௌந்திர ராஜனும், வெண்கலக் குரலோன் அமரர் திரு. சீர்காழி கோவிந்த ராஜனும் இணைந்து பாடியிருப்பார்கள்...

இருவரும் சேர்ந்து இப்பாடலில் ''தந்தனத்தானே.... ஏலேலோ... தந்தனத்தானே.... ஏலேலோ...'' என்றபடி
கோரஸாக ஹம்மிங் கொடுத்திருப்பார்கள்... அடடா..நான் சிறுவயதில் கேட்ட ஹம்மிங் அது...
இன்றும் என் காதில்  ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இப்பாடலில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் வைரம்... உதாரணத்திற்கு...

''விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் 
வீணரெல்லாம் மாறனும் 
வேலை செஞ்சா உயர்வோமென்ற 
விபரம் மண்டையில் ஏறனும் ...''

(இப்படத்திற்கு முன்பு வரை ராமநாதன் அவர்கள் கர்நாடக பாணியில்தான் இசையமைத்து வந்தார். இப்படத்தில் நம் கிராமிய மண இசையைக் கையெலெடுத்தார்... மனிதர் பட்டையைக் கிளப்பி விட்டார்... அத்துனையும் முத்துக்கள்...)



ஏற்றமுன்னா ஏற்றம்..! | Online recorder



கேட்டுப் பாருங்க.. உங்க கருத்தைச் சொல்லுங்க..!
இப்பாடலின் திரைவடிவம் இதோ..!




Wednesday 2 December 2009

தமிழுக்கும் அமுதென்று பேர்..! - திரையிசையில் பாரதிதாசன் பாடல்


''தமிழுக்கும் அமுதென்று பேர்''  பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க  கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...

நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் திருமதி. பி.சுசீலா அவர்கள், தனது கானாமிர்தக் குரலில் இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்...

துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...



தமிழுக்கும் அமுதென்று பேர்... | Music Upload


அன்பான திரு வே.நடனசபாபதி அவர்களே... தாங்கள் பின்னூட்டத்தில் கேட்டபடி... இதே உங்களின் வேண்டுகோளின்  முதல் பாடல் சங்கே முழங்கு பாடலை முன்பே கொடுத்தேன்... அடுத்த பாடலான 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடல் இதோ..

//மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?

வே.நடனசபாபதி//

இப்பாடலின் திரை வடிவம் இதோ..!






Tuesday 1 December 2009

கொல்லையிலே கம்பெடுத்து..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி திருமதி அனிதா குப்புசாமி அவர்களும் சேர்ந்து பாடும் எசப்பாட்டுதான் இந்த 'கொல்லையிலே கம்பெடுத்து' பாடல்... தேமதுரத் தமிழின்  தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் எசப்பாட்டு பாடல்...


கணவனிடம் வயல் காட்டில் பணி செய்யலாம் வாங்க என மனைவி அழைக்க... கணவனோ...சில காரணங்களை சொல்லி வரமுடியாது என்கிறான்... ஏட்டிக்குப் போட்டியாக பாடலில் இருவரும் விளையாடும் அழகு... அசத்தல் போங்க...


ஆரம்பத்தில் பழைய சினிமாவில் வரும் இசையைப் போல் வரும்..பிறகு துள்ளலிசையாக மாறும்... கேட்டுப் பாருங்க... கருத்தைச் சொல்லுங்க...



கொல்லையிலே கம்பெடுத்து..! | Online recorder

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Monday 30 November 2009

சங்கே முழங்கு..! - திரையிசையில் பாரதிதாசன் பாடல்


''சங்கே முழங்கு...'' கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க  கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...

நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் வெண்கலக் குரலார் அமரர். திரு. சீர்காழி கோவிந்தராஜன் மற்றும்  திருமதி. பி.சுசீலா அவர்களும் இணைந்து இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்கள்...

துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...


சங்கே முழங்கு... | Upload Music

அன்பான திரு வே.நடனசபாபதி அவர்களே... தாங்கள் பின்னூட்டத்தில் கேட்டபடி... இதே உங்களின் வேண்டுகோளின்  முதல் பாடல் சங்கே முழங்கு... அடுத்த பாடலை.. நாளை தருகிறேன்... (ஆண்குரல் T.M.S அல்ல சீர்காழி கோவிந்தராஜனுடையது...)

//மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?

வே.நடனசபாபதி//



கொல்லையிலே கொய்யாமரம்..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்தில் மெல்லிசையாகவும், அப்படியே துள்ளலிசையாக மாறும் பாருங்கள்.. அடடா... தமிழிசை... தமிழிசைதான்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



கொல்லையிலே கொய்யாமரம்..! | Upload Music



Wednesday 25 November 2009

தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனைவியான அனிதா குப்புசாமி அவர்களின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் கும்மிப் பாடல்...

தமிழ்க்கீர்த்தனை போல் ஆரம்பத்தில் ஆலாபனையும், ராக தாளமும்... உங்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல் | Music Upload


நன்றி: திருமதி அனிதா குப்புசாமி, 'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி குழுவினர்



Monday 23 November 2009

சீரகம் பாத்தி கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மற்றுமொரு சோக மயமான ஆனால் அற்புதமான காதல் கீதம்...

தன் காதலி பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தவள்.. தான் ஏழை என்றறிந்தும் காதலால் அவனுக்கு மனைவியானாள்... அவள் வீட்டில் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்தாள் என்பதையும், அவளை தான் எப்படி வைத்து காக்கிறான் என்பதையும் மிக அழகாக... கிராமத்து மணம் கமழ.. கிராமிய இசையோடு ஒலிக்கும் பாடல்தான்...

'சீரகம் பாத்தி கட்டி... செடிக்குச் செடி குஞ்சம் கட்டி...'

கேட்டு மகிழுங்க.. மறக்காம உங்க கருத்தையும், வேண்டிய பாடலையும் பின்னூட்டத்துல சொல்லுங்க...


சீரகம் பாத்தி கட்டி..! | Upload Music

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி



Monday 9 November 2009

தித்திரித்திரி பொம்மக்கோ…! -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்

தித்திரித்திரி பொம்மக்கோ…! தில்லாலங்கடி பொம்மக்கோ..! -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் பாடல்...

நாம் சிறு வயதில் (கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு தெரியும்)  ' ஏர் ஓட்டும் மானுக்கு எண்ணி வையி பத்து... சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு போட்டு மொத்து...' போன்ற கிராமியக் கதை சொல்லாடல்களை அழகாக, இப்பாடலில் பயன் படுத்தி இருப்பார் புஷ்பவனம் குப்புசாமி..

பாடலின் ஆரம்பமே துள்ளலிசையோடு உங்களை ஆட வைக்கும் படி இருக்கும்...கேட்டுப் பாருங்களேன்...


தித்திரித்திரி பொம்மக்கோ..! | Online recorder



Thursday 5 November 2009

ஜம்புலிங்கமே ஜடாதரா… - திரைப்படப்பாடல்


காசேதான் கடவுளடா படத்தில் இடம்பெற்ற கலக்கலான நகைச்சுவைப் பாடல்… ‘ஜம்புலிங்கமே ஜடாதரா… வாயுலிங்கமே அரோகரா...’

இப்படத்தின் நாயகர்களான முத்துரானும், ஸ்ரீகாந்தும் அவர்கள் வீட்டிலுள்ள மனோரமாவை ஏமாற்ற, டீக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு போலிச்சாமியார் வேடமிட்டு அழைத்து வந்து விடுவார்கள்...

மூவரும் சேர்ந்து பஜனை பாடல் பாடுவார்கள்... அப்போதுதான் இந்த கலக்கலான நகைச்சுவைப் பாடல் இடம் பெறும்...  கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்பாடலுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார். அதுமட்டுமின்றி...இப்படலில் மேற்கத்திய பாணி இசையை அழகாக உள்ளே நுழைத்திருப்பார் எம்.எஸ்.வி.

இப்பாடலில்... 'பஞ்சலிங்கமே மசால் வடா...', 'கோழிக்கறியைக் கேட்டவனே...' 'மதுக்கஷாயத்தைக் குடித்தவனே..' என்று வரும்... இந்த வரிகள் கொண்ட பாடலை, அப்போதிருந்த தணிக்கைத் துறையினர் கத்தரி போட்டனர். பின்பு, மசால் வடா - மடா படா என்றும்... கோழிக்கறி - ஓட்டல் கறி என்றும்... மதுக்கஷாயம் - மல கஷாயம் என்றும் மாற்றப்பட்டது...

நீங்கள் கேட்கவிருப்பது தணிக்கைக்கு முந்தைய பாடல்... கேட்டு மகிழுங்க... பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...



ஜம்புலிங்கமே ஜடாதரா... - நகைச்சுவைத் திரைப்பாடல் | Upload Music

நன்றி : திரு எம்.கே.ஆர். சாந்தாராம்... (தகவல் மற்றும் பாடல் உதவிக்கு)

இப்பாடலின் திரைவடிவம் இங்கே...


Jambulingame Jadaadaraa
Uploaded by comeupdowngo. - More college and campus videos.




Tuesday 3 November 2009

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்..! - திரைப்பாடல்



1965-ல் வெளியான, எம்.ஜி.ஆரின் இனிமையான காதல் திரைப்பாடல் இது...
எம்.ஜி.ஆர் பாடலில் மகுடம் சூட்டிய காதல் பாடல் இது…. பணம் படைத்தவன் என்ற படத்தில் இடம்பெற்ற “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவார்கள்.
டி எம் சௌந்தரராஜனின் கானாமிர்தக் குரலும்…. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் குரலும்…. நம் இதயத்தை ஊடுருவும்…
கவிஞர் வாலியின் வாலிப வரிகளில் அமைந்த இப்பாடலிற்கு இசையமைத்த அக்கால இசைச் சக்கரவர்த்திகளான எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் அவர்களுடைய இசைக்கோலங்களை நம் செவி…. இதயம் என சகலத்திலும் இட்டிருப்பார்கள் …

கேட்டு மகிழுங்க… மறக்காம உங்க கருத்தையும் பதிவு செய்யுங்க...தேவையெனில் பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...
நன்றி:  எம்.கே.ஆர்.சாந்தாராம்




இப்பாடலின் திரை வடிவம்






Monday 2 November 2009

'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' - கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் இதோ மற்றுமொரு துள்ளிசைப் பாடல்... 'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..'

இப்பாடலில் கிராமத்துப் பெண் ஒருத்தி தான் பிறந்த ஊரின் பெருமைகளை மிக அழகாகச் சொல்கிறாள்... இப்பாடலில் தவில் தனி ஆவர்த்னம் செய்ய... நாதஸ்வரம் நாதத்தோடு கலந்து வர.. உறுமி மேளம் உயிர்ப்போடு ஊடாட... விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் கணீர்க் குரலும்... ஆகா...

அட கேட்டுப் பாருங்க... அப்புறம் தெரியும்...


கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' | Upload Music

(உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்க... முடிஞ்சா பின்னுட்டமிடுங்க..>)



Friday 30 October 2009

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல்


கிராமிய கீத மன்னன் திரு. புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசையை அள்ளித் தெளிக்கும் மிக அற்புதமான கிராமியப் பாடல்… ‘ஒண்ணும்… ஒண்ணும்… ரெண்டுதான்…’.

பாடல் ஆரம்பித்தது முதல் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ஆடவைக்கும் பாடலைச் சேர்ந்தது இப்பாடல். இதன் கிராமிய இசை உங்களை துள்ளாட்டம் போட வைக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை... கேட்டு மகிழுங்கள் இந்தப் பாடலை...

முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்...


ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல் | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்



Thursday 29 October 2009

தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! - கிராமியப் பாடல்


கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் சிறந்த பாடல்களில் இதுவும் ஓன்று... 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன்..!

தன்னுடைய காதலியை மணம் முடிப்பதற்காகவும், அதற்க்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், ஆசைகளும், அவர் எண்ண ஓட்டங்களும் எங்கெங்கு செல்கிறது என்பதை அப்படியே மண் மணம் மாறாமல் கிராமத்து துள்ளலிசையோடு கொடுத்திருக்கிறார்... கேட்டு மகிழுங்கள்..!

அன்பு நண்பர் ராப் அவர்கள் கேட்ட இப்பாடலை, அவர் கேட்ட மறுதினமே வலையேற்றம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

உங்களுக்கு வேண்டிய பாடல்களை கேளுங்கள்... முடிந்தால் பின்னூட்டமிடவும்...


தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! | Online recorder

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Wednesday 28 October 2009

தோட்டுக்கடை ஓரத்திலே... - கிராமியப்பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் சிறந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று...

'தோட்டுக்கடை ஓரத்திலே..... தோடு ஒண்ணாங்க...' என்றபடி... துள்ளலிசையோடு ஆரம்பிக்கும் பாடல், கடைசி வரை அந்த தாளத்தை அற்புதமாக கையாண்டிருப்பார்கள்...

கேட்டு மகிழுங்கள்... கருத்துரையிடுங்கள்...


தோட்டுக் கடை ஓரத்திலே... | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர்



Tuesday 27 October 2009

சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..! - திரைப்படப் பாடல்


சிறைச்சாலை படத்தில் அந்தமான் சிறையில் இருக்கும் காதற்க் கணவன், தமிழகத்தில் இருக்கும் தன் மனைவியை நினைத்துப் பாடும் பாடல்… மனைவியும் பாடுகிறாள்...

'சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..!'

இப்பாடலில் காதல் மனைவியை சந்திக்க முடியாததால் ஏற்படும் நிகழ்வை கவிஞர் அழகான வரிகளில் கோர்த்துக் கொடுக்க... அதற்கேற்றாற் போன்ற மனதைப் பிழியும் இசையும்... தனிமையையும், ஏக்கத்தையும் காட்டும் குரல்களும்... அடடா... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்...


சுட்டும் சுடர்விழி பார்வையிலே..! | Online recorder



Tuesday 20 October 2009

தட்டு முட்டுப் பொட்டுக்காரா... ராசா..! - கிராமியப் பாடல்

'தன்னானே... நானன்னானே... தன்னன்னானே... தட்டு முட்டுப் பொட்டுக்காரா..!' விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினருன் அருமையான கிராமியப் பாடல் இது…

காதலனும்… காதலியும் ஒருவரையொருவர் வர்ணித்துப் பாடும் பாங்கும்… அதற்கேற்றாற் போன்ற நமது கிராமத்து துள்ளலிசையும்… அடடா… கேட்டுப் பாருங்க…

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்



தட்டு முட்டு பொட்டுக்காரா... ராசா..! | Online recorder

(முடிந்தால் பின்னூட்டமிடுங்களேன்)



ஏ... ஆக்காட்டி... ஆக்காட்டி... - நாட்டுப்புறப் பாடல்..!

பேராசிரியர் குணசேகரன்

‘தவமாய்த் தவமிருந்து’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஜெயா மூர்த்தி அவர்களின் அற்புதமான குரலில் பாடிய இந்த பாட்டு புதுவை பல்கலை கழக பேராசிரியர் குண சேகரன் அவர்கள் தொகுத்த நாட்டுப்புறப்பாட்டு.

இதன் உரிமையாளரின் அனுமதி இன்றி இப்படத்தில் பயன்படுத்த முற்பட்டதால், நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. அதனால் இப்பாடல், அப்படத்திலிருந்தே நீக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக அப்படப்பாடல்களைக் கொண்ட குறுந்தகடுகளில் அப்பாடல் இடம்பிடித்திருந்தது. அன்று கேட்ட பாடல் இது… இது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் அருமையான பாடல்….

பாடகரின் குரலில் சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் அப்படியே உங்கள் கண் முன்னே நிறுத்தும்…. நாட்டுப்புறப் பாட்டென்றால் இதல்லவா பாட்டு என உங்களைச் சொல்ல வைக்கும்…. கேட்டுப் பாருங்கள்…

நன்றி: புதுவை பல்கலைகழக பேராசிரியர் குண சேகரன்



ஏ... ஆக்காட்டி... ஆக்காட்டி... | Upload Music

முடிந்தால் பின்னுட்டமிடுங்கள்...

இந்த பாடலின் திரை வடிவம் காண...: https://www.youtube.com/watch?v=we_uT_WTDC4