(பல்லவி)
கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சி தின்பேனடி
ஓஞ்சி போனேனடி உன்னை ஒரு
தடவை பார்த்ததுல
காஞ்சி போறேனடி உன்னை காணாத
பொழுதினிலே
கண்ணிமைக்கும் நேரத்துல….
காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சி தின்பேனடி...
(சரணம் - 1)
வரன் தேடி ஊரு ஊரா பார்க்காத
பொண்ணு இல்ல
வரம் போல நீ கிடைச்ச உன்ன
மிஞ்ச யாரும் இல்ல
வரன் தேடி ஊரு ஊரா பார்க்காத பொண்ணு இல்ல
வரம் போல நீ கிடைச்ச உன்ன மிஞ்ச யாரும் இல்ல
ஊரெல்லாம் பாக்கும்படி
கல்யாணம் பண்ணிக்கலாம்
நான் ஒண்டி மட்டும் ஒன்ன
பாக்க தாழ்ப்பாளை போட்டுக்கலாம்
அடி சிரிக்கும் சிங்காரியே…
நூறு ரூபாய்க்கு சில்லரை கொடு
சீஸன் இல்லா மாம்பழமே…
உன் கன்னத்தை பறிக்க விடு…
நீ நிமர நிலைகொலைஞ்சேன்…
அந்த நெனப்புல கைய பிசைஞ்சேன்…
(கண்ணிமைக்கும் நேரத்துல….
காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சி தின்பேனடி…)
சரணம் - 2
வழவழக்கும் வாழை இலை… இடுப்புக்கு
அழகானது
வண்ணங் கொண்ட நட்சத்திரம்
ஒளிரும் கண்ணானது
என்ன சொல்லி நான் பாட…
எதுவும் நீயானது
என் எண்ணமெல்லாம் ஒன்னத்தானே
நெனச்சி அசைபோடுது
நான் திருடி பழக்கமில்ல
ஆனா திருடனானேடி
நீ பாக்காத நேரத்துல ஒன்னை
பாத்து ரசிச்சேனடி
இது நெலையா தொடராம என்னை
நேசிக்க வேணுமடி
கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி
ஓஞ்சி போனேனடி உன்னை ஒரு தடவை பார்த்ததுல
காஞ்சி போறேனடி உன்னை காணாத பொழுதினிலே
கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி...
(இப்பாடலை எழுதியவர் யாரென்று அறியேன். ஆனால் எனக்கு மிகவும் பாடல் இது. சென்னையில் இருந்து ஆத்தூர் செல்லும்போது, விக்கிரவண்டி மோட்டல்களில் பேருந்தை நிறுத்தும்போது இந்த பாடலை கேட்டு ரசித்து நின்றிருக்கிறேன். அற்புதமான கிராமியப் பாடல் இது. துள்ளலான இசையும், பாடகரின் குரலும் சினிமா உலகிற்கே நம்மை இட்டுச்செல்லும்)
No comments:
Post a Comment