ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday 30 March 2011

நாடே இதயம் எங்கள் நாடே உதிரம்..! - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சிறப்பு பாடல்


1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய 'நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்...' என்ற பாடலை இன்று சிறப்புப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

இன்று 2011 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் நமது பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.

இப்பாடலை எழுதியவர், இசையமைத்தவர் யார் என்ற விபரத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவருடைய கணீர்க் குரலில் இப்பாடல் நமது நாடி நரம்புகளை முறுக்கேற்றும்...

இந்தியா கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே 120 கோடி மக்களின் ஆசை. அதில் கிரிக்கெட் தனியிடம் பெறுகிறது. இந்த உலகக் கோப்பையினை வெல்ல இந்திய அணிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

சாதனை நாயகன் சச்சினுக்கு சாதனை மகுடம் சூட்ட இந்த போட்டி நிச்சயம் உதவும்.. இந்தியா கோப்பையை வெல்லும். வெல்க இந்தியா வெல்க..!

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நாடே இதயம்..! | Upload Music

சிறப்புத் தகவல்கள்

@பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்தவர். 


@இந்த பாடல் 1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த, ஜெயா தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.




No comments: