ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday 24 March 2010

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்...! - பழைய திரைப்பாடல் (நேயர் விருப்பம்)

இரு வல்லவர்கள் படத்தில் இடம்பெற்ற அற்பதமான காதல் டூயட் பாடல்தான் இந்த... ''நான் மலரோடு தனியாக வந்தேன்..!'' அன்புத் தோழி கலா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இப்பாடலை பதிவிலிடுகிறேன்...

1966-ல் ஜெய்சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் நடித்த படம் இரு வல்லவர்கள். இப்பாடலிற்கான காதல் வரிககளை தூரிகையிட்டது கவிஞர் கண்ணதாசன்... இசையமைத்தது... திரு. வேதா அவர்கள்... இப்பாடலுக்கு குரல் வழியே உயிர் கொடுத்தவர்கள் நமது டி.எம்.எஸ்ஸும், பி. சிசீலா அவர்களும்..!

இப்பாடலில் பெண் பாடுவது போன்று கவிஞர் வரியின் வைத்திருக்கிறார் பாருங்கள்... அட்டா.. கண்ணதாசனின் ரசனையே ரசனை...

'' என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...''

அன்புத் தோழி கலாவுடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவாசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! நன்றி..!

------------------------------------

கலா said...

வணக்கம் தமிழ்தோட்டம் {தளம்}வழியாக உங்கள் தளங்களைப் பார்வையிட்டேன் மிக அருமை... பழைய பாடல்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது நன்றி தயவு செய்து{ நான் தேடும் பாடல்} இருந்தால் உங்கள் இடுகையில் சேருங்கள் இருவல்லவர்களில்.... திரு.செளந்தரராஜன் பி.சுசிலா அவர்கள் பாடிய.... நான் மலரோடு தனியாக ஏன் .. இங்கு வந்தேன்..! நன்றி



இப்பாடலின் திரை வடிவம் இதோ..!





4 comments:

கலா said...

மிக்க,மிக்க நன்றி மோகனன்

மோகனன் said...

வாழ்த்தியமைக்கும்... வாசித்தமைக்கும்... பாடல் என்னிடம் கேட்டதற்கும்... அப்பாடலை நீங்கள் (காதால்) கேட்டதற்கும் மிக்க நன்றி தோழி...

அடிக்கடி கேட்க வாங்க..!

பாலராஜன்கீதா said...

http://gunamathi.wordpress.com/2010/02/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/
அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம். பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.

பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால் மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக் கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.

அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு அவள் முகத்தை நிலவு என மயங்கி, ‘இது என்ன, நிலவு இவ்வளவு ஒளி வீசுகிறதே!’ என்று எண்ணமிட்டது; அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை மலரில் இருப்பதாக உணர்ந்தது.

ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல் இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது. ‘ இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை மூடிக்கொள்ளுமே’ என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!

அப்பேரழகிக்கு அதிர்ச்சி! ‘இது என்ன, நாவற்பழம் பறக்குமா?
பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது’ என்று வியப்பில் ஆழ்ந்து விட்டாளாம்!

விவேக சிந்தாமணியின் 19ஆம் பாடல் இந்தக் காட்சியை அழகாக விளக்குகிறது; படிப்போரை மகிழச் செய்கிறது.

அந்தப் பாடல் இதுதான் :

தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்புவின் கனி என்று

தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்

வானுறு மதியம் வந்ததென்று எண்ணி

மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்

போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?

புதுமையோ இது?எனப் புகன்றாள்.

புலவர், தன் கற்பனையால் அந்த அழகியையும் வண்டையும் மயங்கச் செய்ததோடு நம்மையும் மயங்கச் செய்து விடுகிறாரே!

மோகனன் said...

அருமை தோழி...

தேன்திமழைப் பருகக் கொடுத்திருக்கிறீர்... நன்றி... நன்றி..!