ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday 22 April 2010

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..? - திரைப்படப் பாடல்

எனக்குப் பிடித்த பாடல் வரிசைகளில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..?' என்கிற இப்பாடலும் ஓன்று... 2000-ல் வெளிவந்த 'நீ வருவாய் என' திரைப்படத்தில் அமைந்த பாடல்கள் அத்தனையும் மெல்லிசை முத்துக்கள். அம்முத்துக்களில் சிறந்த முத்துப் பாடலென இதைச் சொல்வேன்..! இப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் விவேகா என்கிற விவேகானந்தன்ஆவார்.

இப்பாடல்தான் இவருக்கு திரைத்துறையில் முதல் பாடலாகும். காதலியின் ஏக்கத்தினை இப்பாடலில் மிக அழகாகச் சொல்லியிருப்பார் கவிஞர். 
இப்பாடலின் மிகப் பெரிய வெற்றி இசையைச் சாரும்... இப்பாடலில் மெல்லிசையால் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்திருப்பார் இசை வசந்தம் எஸ்.ஏ. ராஜ்குமார். ஹரிணி அவர்கள் தன் தேனினும் இனிய குரலில் இப்பாடலை தோய்த்துக் கொடுத்திருப்பார். அதையே கடைசியாக வரும் பல்லவியில் அருண்மொழியும் செய்திருப்பார்... 

இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..!

உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்க..! நான் தருகிறேன்..!


பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..? | Musicians Available




2 comments:

சசிகுமார் said...

எனக்கும் பிடித்த பாடல் நண்பா

மோகனன் said...

அப்படியா நண்பா... மிக்க மகிழ்ச்சி..!

அடிக்கடி கேட்க வாங்க..!