திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கவிஞர் மருதகாசியின் வைர வரிகளில், டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இப்பாடல் உயிர் பெற்றது.
மருதகாசியினால் படைக்கபட்ட இப்பாடல்களில் உள்ள வரிகள் அத்துனையும் வைரம் என்றே சொல்லலாம்... இப்பாடலில் மூன்று சரணங்கள் உள்ளன.. ஒவ்வொர் சரணத்திலும்... சமூகத்திற்கான கருத்துக்களை உள்ளடக்கி, மிக எளிமையாகக் கொடுத்திருப்பார்...
முதல் சரணத்தில்...
''வானம் பொழியுது... பூமி விளையுது தம்பிப் பயலே..!''
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே..!
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே..!
இரண்டாவது சரணத்தில்...
''தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு..!
தன் குறையை மறந்து மேல பாக்குது பதரு..!
அதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே..!
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே..!''
தன் குறையை மறந்து மேல பாக்குது பதரு..!
அதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே..!
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே..!''
மூன்றாவது சரணத்தில்...
''ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே..!
எதுக்கும் ஆமாஞ் சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே..!''
எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!