ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 30 July 2010

சின்ன மணிக் கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு..! - திரைப்படப் பாடல்


வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற சோகப் பாடலிது...

1992 - ல் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்திள்கு இசையமைத்தவர், நமது இசைஞானி இளையராஜா அவர்கள். இப்பாடலை எழுதிய கவிஞர் யார் என்று தகவல் அறித்தால் நலமாக இருக்கும்.. நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்பாடலைப் பாடிவர், எனக்கு மிகவும் பிடித்த பாடகரான ஏழிசை மன்னர், கானதேவன் கே.ஜே யேசுதாஸ் அவர்கள்... இப்பாடல் ஒரு சோகப்பாடிலாகும்...

கதாநாயகியுடன் கதாநாயகன் சேர நினைப்பான், ஆனால் கதாநாயகியோ அவனுடன் சேர மறுத்து விடுவாள். அதற்கான காரணத்தை (கதாநாயகிக்கு கொடும் நோய் இருப்பதால், அவள் விரைவில் இறக்கப் போகிறாள்) கதாநாயகனிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அவனை ஏற்க மளுப்பது ஏன் என கதநாயகியிடம், கதாநாயகனின் நண்பன் வினவுகிறான்... அவனிடம் உண்மையைக் கூறுகிறாள்... அச்சூழலில் அந்த நண்பன் பாடும் பாடல்தான் இது...

இப்பாடலை கேட்டுப் பாருங்கள்... உங்கள் மனதையும் இது சற்று நெகிழச் செய்து விடும்...  யேசுதாஸின் மனதைப் பிழியும் குரலும், இளையராஜாவின் இனிய மெல்லிசையும் உங்கள் மனதை உரசிப் பார்க்கும்...

எனக்குப் பிடித்த இப்பாடலை என்னுடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!



சின்ன மணிக் கோயிலிலே..! | Upload Music

(இது என்னுடைய 50-வது பதிவு என்பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.. இதற்கு ஆதரவு தரும் உங்களனைவருக்கும் எனது நன்றிகள்..)



2 comments:

Anonymous said...

நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். அதைப் பார்க்க, கீழுள்ள இணைப்பைப் பின்தொடர்க:

http://www.periyarl.com/

பல மேம்பட்ட வசதிகளுடன் ஒரு தமிழ் திரட்டி - http://www.periyarl.com/

உங்கள் கருத்துக்களை இன்னும் வேகமாக முன்னிருத்தவும் உங்கள் எழுத்துக்களை மேலும் விரிவடைய செய்யவும் நமது குழுமத்தில் இருந்து ஒரு திரட்டியை உருவாக்கி உள்ளோம்.உங்களிடம் blog இருக்குமே ஆனால் பகலவன் திரட்டியின் vote button யை உங்கள் blog யில் பின்வரும் இணைப்பை பயன்படுத்தி இணைத்து கொள்ளுங்கள்.

vote button இணைப்பு - http://periyarl.com/page.php?page=vote



நன்றி
பகலவன் திரட்டி
http://www.periyarl.com/
பகலவன் குழுமம்

மோகனன் said...

தகவலிற்கு நன்றி தோழரே...

அடிக்கடி கேட்க வாங்க..!