'பூங்காத்து திரும்புமா..? என் பாட்டை விரும்புமா..?' என்ற பாடலை மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடலை இன்று பதிவிலிடுகிறேன்...
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1985-ல் வெளி வந்த திரைப்படம் 'முதல் மரியாதை'
இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் முத்துக்கள் என்றே சொல்லலாம். அதில் சிறப்புப் பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம்... இப்பாடல் தேசிய விருது பெற்ற பாடலாகும். (வைரமுத்துவிற்கு கிடைத்தது)
வைரமுத்துவின் வரிகளுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, 'அமரர்' மலேசியா வாசுதேவன் குரல் வழியே உயிர் கொடுத்திருப்பார்... நெஞ்சை உருக்கும் படி இருக்கும் அவரது குரல்...
நேற்றைய தினம் (20.02.2011) மறைந்த திரு. மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு இனிய தமிழ்ப்பாடல்கள் தளம் சார்பிலும், இதன் வாசகர்கள் சார்பிலும் இப்பாடல் மூலம் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்...
இனி இந்த இசைப் பூங்காத்து திரும்புமா..?

10 comments:
பூங்காற்று திரும்பாது.
தன் அடையாளத்தை ஆழமாகப் பதித்துவிட்டு உறங்கும் இதயத்திற்கு அஞ்சலிகள் :(
முதல் மரியாதை சிவாஜிக்கு அருமையாக பாடியவர்.ஆன்மா சாந்தி அடையட்டும்.
ஆம் தமிழன்பரே...
இசை வழியே அவரது குரல் என்றும் அமரத்துவம் பெற்றிருக்கும்...
அஞ்சலி செலுத்துவோம் அனைவரும்...
அவருடைய ஆத்மா சாந்தி பெறட்டும் பிரார்த்திப்போம் அமுதகிருஷ்ணா...
thanks mr moganan for malaysia vasudevan song as last respite...
vasudevan avargalin kuralil oru thalattu padalana 'Nandu" padathil varum "Alli thantha vanam annai allava" endra paadalai pathivetrungal please
நன்றி ரவிச்சந்திரன்...
அவரது பாடலை கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...
என் நெஞ்சை தொட்ட பாடல்..
வரிகளுக்காக மட்டுமல்ல குரல்களுக்காகவும்
இந்த பாட்டுத் தான்
என் செல்(ல) போனின் ரிங்டோன்
அப்ப எந்தளவுக்கு
இந்த பாட்டுமேல எனக்கு....
ம்..ம்..
மிக்க மகிழ்ச்சி தேழரே...
I LIKE IT VERY MUCH
நன்றி தோழரே...
Post a Comment