கோலார் தங்கச்சுரங்கப் பகுதியில் இருக்கும் அன்பு நண்பர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டதற்காக, ‘அன்னை வேளாங்கன்னி’ என்ற படத்தில் ‘நீலக் கடலின் ஓரத்தில்… நீங்கா இன்பக் காவியமாம்…’ என்ற பாடலை நேயர் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.
1971-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15, அன்று இந்த திரைப்படம் வெளியானது. வேளாங்கன்னி மாதாவின் புகழைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் ஜெயலலிதா, பத்மினி, கே.ஆர்.விஜயா, ஆகியோர் நடித்திருக்கின்றனர். அப்போது இளம்பிராயப் பருவத்தில், சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த கமலஹாசனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை இயக்கியவர் கே. தங்கப்பன்.
இப்படத்தின் முதல் பாடலாக இடம்பெறும் 'நீலக்கடலின் ஓரத்தில்…' என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, ஜி. தேவராஜன் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி. மாதுரி ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.
இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் கேட்டு மகிழுங்கள். தேவையெனில் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்….
14 comments:
மிகவும் பிடித்த பாடல்... அறியாத பல தகவல்களுக்கு நன்றி...
நன்றி தோழரே... அது எப்படி முதல் ஆளாக பதிவு செய்கிறீர்..?
anbu moganan avargalukku, mikka mikka nandri, viruppa padalai thedi piduthu pathivetriatharku thanks. thodaratum ungal padalgal thoguppu pani.
matroru padal anbare, 'yesunathar pesinal enna pesuvar' padiyavar madhuri, padam theriyathu, muyarchi seyyungal nanbare.
வாங்க ராமச்சந்திரன்...
தங்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்த மகிழ்ச்சி எனக்கு... ஆனால் மிகவும் காலதாமதமாகிவிட்டது மன்னிக்கவும்.
கடவுள் குறித்தோ, மதம் குறித்தோ இனி பாடல்களை நான் வழங்கவிரும்பவில்லை...
நன்றி..!
காலத்தால் அழியாத காவியம்...
Mohamed Kasim
அன்பு காசிம் அவர்களே...
இதற்குப் பெயர்தான் மதம், மொழி கடந்த ரசனை என்பது...
இசைதான் இதயங்களை இணைக்கும் மொழி...
நன்றி தோழரே...
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத கண்ணதாசன் பாடல் இது.
ஜெயலலிதா ஜெமினி கணேசன் ஜோடியில் வந்த ஒன்றிரண்டு படங்களில் இதுவும் ஒன்று.
கமலஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடினார் என்றாலும் இப்படத்தில் தங்கப்பன் மாஸ்டருக்கு உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
இப்படத்தின் மூலம் வந்த வருவாய் முழுவதும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நல்ல காரிய்த்துக்கோ அல்லாது யாரோ ஒருவருக்கு நிதியாகவோ அளிக்கப்பட்டது. அதனால் அனைத்து நடிகர் நடிகைகளும் சம்பளம் வாங்காமல் நடித்தார்கள்...
அன்பான கமலா சேவியர் அவர்களுக்கு...
தங்களது கருத்துக்கள் இந்த பதிவை இன்னும் பலமாக்குகிறது...
ரசித்தமைக்கு நன்றிகள் பல...
ருசி கண்ட பூனை என்ற படத்தில் S.Janaki குழந்தையின் குரலில் பாடிய
"கண்ணா நீ எங்கே " என்ற
முழு பாட்டை, நல்ல சுத்தமான கிளாரிட்டியில் பதிவேற்றம் செய்யுங்களேன்
== ரங்கன்
அன்பு ரங்கன் அவர்களுக்கு...
கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...
மூன்று வாரம் பொறுத்துக்கொள்ளுங்களேன்...
நன்றி மோகனன்.
= ரங்கன்
நன்றி ரங்கன்...
அன்புள்ள ரங்கன் அவர்களுக்கு நீங்கள் கேட்ட 'கண்ணா நீ எங்கே' என்ற பாடல் கீழ்கண்ட இணைப்பில் இருக்கிறது... எடுத்துக் கொள்ளுங்கள்...
இப்பாடலை பதிவிடமுடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்...
http://www.asoktamil.opendrive.com/files/Nl8zMTA3ODIyOF9oWGhWQl85OWRl/kannaa%20nee%20inge%20vaa.mp3
Mikka Nandri Nanbare.
Thodaruttum ungal sevai
Post a Comment