ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 22 February 2010

ஆத்து மணலிலே கோட்டை கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'ஆத்து மணலிலே கோட்டை கட்டி..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிக அழகாகப் பாட, அதை அப்படியே அவரது பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுகிறார்கள், மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல்... போகப் போக துள்ளலிசைப் பாடலாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன் கலந்த துள்ளலிசைப் பாடலாக... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!


ஆத்து மணலிலே கோட்டை கட்டி... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Thursday, 18 February 2010

அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..!'

எப்பாடலிலும் பாடகர் பாடியதைத்தான், பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுவார்கள்... இப்பாடலில் அப்படியில்லை... பாடகர் பாடுவதை குழுவினர் பாடுவர், பின் குழுவினர் பாடுவதை பாடகர் பாடுவார்...துள்ளலிசையின் ஆரம்பிக்கும் பாடல்... போகப் போக துடிப்பான இசையாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டுப் பாருங்க... அப்புறம் சொல்வீங்க..!


அறிவோம் நன்றாக..! | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்.



Tuesday, 16 February 2010

தமிழா... நீ பேசுவது தமிழா..! - தமிழிசைப் பாடல்!


தமிழா... நீ பேசுவது தமிழா..! என்ற பாடல்தான் இது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடல் இது, இசையமைத்து, பாடியிருப்பவர் நம் கலைமாமணி திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்...

இப்பாடலில் ஆங்கில வார்த்தைகள் எப்படி நம் தமிழை சிதைத்து ஊடுருவியுள்ளன என்பதை கவிஞர் கோபத்துடன் எழுதியுள்ளார், அதை அப்படியே தம் குரலில் பிரதிபலித்துக் காட்டியுள்ளார் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்..!

அன்பு நண்பர் அமுதநேசன் அவர்கள் மின்னஞ்சல் மூலம் என்னிடம் வேண்டுகோள் விடுத்த பாடல்தான் இந்த 'தமிழா... நீ பேசுவது தமிழா..! எனும் பாடல்.

இந்த பாடலை மிகத் தாமதமாக வழங்குவதற்கு மன்னிக்க வேண்டும் அமுதநேசன்... எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும், இப்பாடலை எனக்கு வழங்கிய நண்பர் தமிழ் சாந்த குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்...

இப்படலை கேட்டுப் பாருங்கள்... வேண்டுவோர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்..!

இதோ அப்பாடல்...


தமிழா... நீ பேசுவது தமிழா..! | Music Upload

-------------------------
Hi

Pl help me download the song "TAMIZHA NEE PESUVATHU TAMIZHA" sung by thenisai Chellappa and written by kasi Ananthan.

I visited your blog and found it very informative and useful. Pl continue the good work.

Regards

S J Amuthanesan



Sunday, 14 February 2010

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… - திரைப் பாடல்


‘சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… உன்னை நெஞ்சில் வச்சிகிட்டேன்..!’
எனை நேசித்துக் கொண்டிருக்கும் என்னுடைய கவிதைக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது…

நாங்களிருவரும் நேசித்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் சேர்ந்து வாழ்கின்ற சூழல் இன்னும் அமையவில்லை… ஆதலால் இன்னொரு ஜென்மம் எடுத்தேனும் உனக்காக காத்திருப்பேன் என என்னவள் என்னிடம் கூறினாள்… இப்பாடலின் வழியாக..! உப்படாலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உன் நினைவுதானடா என்றாள்..!

இப்பாடல் இடம் பெற்ற படம்: தாஸ், பாடியவர்கள்: ஹரிஹரன் மற்றும் ஸ்ரேயா கோஷல், இசை: யுவன் சங்கர் ராஜா

என்னவளுக்காகவும், எனக்காகவும் எங்களைப் போன்ற காதலர்களுக்காகவும் இக்காதலர் தினத்தில் இப்படாலை பதிவிலிடுகிறேன்… கேட்டு மகிழுங்கள்..!


சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்... | Upload Music

(உலக காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்…




Tuesday, 9 February 2010

புது ரூட்டுலதான்..! - கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்..!



ஏழிசை மன்னர், கான தேவன் கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்று ..!

சீயான் என்று அழைக்கப்படும் விக்ரம் அறிமுகமான முதல் படம் மீரா, அப்படத்தில் இடம்பிடித்த பாடல் தான் 'புது ரூட்டுலதான்..!' பாடல்


பாடலின் வரிகள் அத்தனையும் முத்துக்கள்தான்... இசைஞானி இளையராஜாவின் இசைத் தாலாட்டில், கான தேவனின் மயக்கும் குரலில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்...


யேசுதாஸ் மற்றும் அவரது குழுவினரும் இப்பாடலில் தனி ஆவர்த்தனமே செய்திருப்பார்கள்... கேட்டுப் பாருங்க..!



புது ரூட்டுலதான்..! | Music Upload

இப்பாடலின் திரைவடிவம் இதோ





Wednesday, 20 January 2010

கையில வாங்கினேன்... பையில போடல..! - பழைய திரைப்படப் பாடல்

''கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...''  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் இது... திருச்சி லோகநாதன் அவர்கள் தன் இனிய குரலில் இப்பாடலை மிகவும் அருமையாக பாடியிருப்பார்..!

இப்பாடல் இடம் பெற்ற படம்: இரும்புத் திரை,  இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கட்ராமன், படம் வெளிவந்த ஆண்டு: 1960

வைரத்தை வெட்டி எடுத்த வரிகளைக் கொண்ட பாடல் இது... ஏழை வர்க்கத்தினருக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்குமான பாடல் இது... மாதச் சம்பளக்காரர்கள் படும் அவல நிலையை இப்பாடலில் தோலுரித்துக் காட்டியிருப்பார்  அமர கவி பட்டுக்கோட்டையார்..!

உதாரணத்திற்கு

''மாசம் முப்பது நாளும் உழைச்சி
வறுமை பிடிச்சி... உருவம் இளைச்சி...
காச வாங்கினாகடன்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
உனக்கு எனக்குன்னு பிக்கிறான்..!''


கையில வாங்கினேன்..பையில போடல..! | Upload Music

இப்பாடலை கேட்டுப் பாருங்க... பதிவிறக்கமும் செஞ்சி மகிழுங்க... மறக்காம  உங்க கருத்தையும் சொல்லுங்க..!


இப்பாடலின் திரைவடிவம் இதோ..!





Tuesday, 12 January 2010

மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி..! - பழைய திரைப்படப் பாடல்


'திரைக்கவித் திலகம்' என அழைக்கப்பட்ட கவிஞர் மருதகாசியின் வரிகளில் மின்னிய அருமையான விவசாயம் சார்ந்த சினிமாப் பாடல்தான்... இந்த
''மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி.. வயக்காட்டை உழுது போடு செல்லக்கண்ணு!'' பாடல்

ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக, “மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.

1957-ல் வெளியான இப்படத்திற்கு இசையமைத்தவர், திரை இசைத் திலகம் கே.வி. 
மகா தேவன் அவர்கள். பாடியிருப்பவர் நமது டி.எம் சௌந்திர ராஜன்தான்.
இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் வைரம்... உதாரணத்திற்கு

''ஆத்தூரு கிச்சடி சம்பா...
பாத்து வாங்கி வெதை வெதச்சி'
' நான் பிறந்த ஊர் இது என்பதில் எனக்கு ஒரு தனி சந்தோசம் 

"சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு" என்பார் மருதகாசி.
             


மணப்பாறை மாடு கட்டி..! | Upload Music

கேட்டுப் பாருங்க.. உங்க கருத்தைச் சொல்லுங்க..! 


(இப்பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியதாக தவறுதலாக இப்பதிவில் இட்டிருந்தேன்... இன்றுதான் அதன் உண்மை நிலை 30.11.2010 தெரிந்தது... மாற்றி விட்டேன்... தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் தோழர்களே...)


இப்பாடலின் திரை வடிவம் இதோ..!