
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Friday, 30 October 2009
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல்
கிராமிய கீத மன்னன் திரு. புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசையை அள்ளித் தெளிக்கும் மிக அற்புதமான கிராமியப் பாடல்… ‘ஒண்ணும்… ஒண்ணும்… ரெண்டுதான்…’.
பாடல் ஆரம்பித்தது முதல் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ஆடவைக்கும் பாடலைச் சேர்ந்தது இப்பாடல். இதன் கிராமிய இசை உங்களை துள்ளாட்டம் போட வைக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை... கேட்டு மகிழுங்கள் இந்தப் பாடலை...
முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்...
Thursday, 29 October 2009
தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! - கிராமியப் பாடல்
கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் சிறந்த பாடல்களில் இதுவும் ஓன்று... 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன்..!
தன்னுடைய காதலியை மணம் முடிப்பதற்காகவும், அதற்க்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், ஆசைகளும், அவர் எண்ண ஓட்டங்களும் எங்கெங்கு செல்கிறது என்பதை அப்படியே மண் மணம் மாறாமல் கிராமத்து துள்ளலிசையோடு கொடுத்திருக்கிறார்... கேட்டு மகிழுங்கள்..!
அன்பு நண்பர் ராப் அவர்கள் கேட்ட இப்பாடலை, அவர் கேட்ட மறுதினமே வலையேற்றம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
உங்களுக்கு வேண்டிய பாடல்களை கேளுங்கள்... முடிந்தால் பின்னூட்டமிடவும்...

Wednesday, 28 October 2009
தோட்டுக்கடை ஓரத்திலே... - கிராமியப்பாடல்
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் சிறந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று...
'தோட்டுக்கடை ஓரத்திலே..... தோடு ஒண்ணாங்க...' என்றபடி... துள்ளலிசையோடு ஆரம்பிக்கும் பாடல், கடைசி வரை அந்த தாளத்தை அற்புதமாக கையாண்டிருப்பார்கள்...
கேட்டு மகிழுங்கள்... கருத்துரையிடுங்கள்...

Tuesday, 27 October 2009
சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..! - திரைப்படப் பாடல்
சிறைச்சாலை படத்தில் அந்தமான் சிறையில் இருக்கும் காதற்க் கணவன், தமிழகத்தில் இருக்கும் தன் மனைவியை நினைத்துப் பாடும் பாடல்… மனைவியும் பாடுகிறாள்...
'சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..!'
இப்பாடலில் காதல் மனைவியை சந்திக்க முடியாததால் ஏற்படும் நிகழ்வை கவிஞர் அழகான வரிகளில் கோர்த்துக் கொடுக்க... அதற்கேற்றாற் போன்ற மனதைப் பிழியும் இசையும்... தனிமையையும், ஏக்கத்தையும் காட்டும் குரல்களும்... அடடா... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்...

Labels:
என் விருப்பம்,
சோகப்பாடல்கள்,
திரைப் பாடல்,
மெல்லிசை
Tuesday, 20 October 2009
தட்டு முட்டுப் பொட்டுக்காரா... ராசா..! - கிராமியப் பாடல்
'தன்னானே... நானன்னானே... தன்னன்னானே... தட்டு முட்டுப் பொட்டுக்காரா..!' விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினருன் அருமையான கிராமியப் பாடல் இது…
காதலனும்… காதலியும் ஒருவரையொருவர் வர்ணித்துப் பாடும் பாங்கும்… அதற்கேற்றாற் போன்ற நமது கிராமத்து துள்ளலிசையும்… அடடா… கேட்டுப் பாருங்க…
நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்

காதலனும்… காதலியும் ஒருவரையொருவர் வர்ணித்துப் பாடும் பாங்கும்… அதற்கேற்றாற் போன்ற நமது கிராமத்து துள்ளலிசையும்… அடடா… கேட்டுப் பாருங்க…
நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்

ஏ... ஆக்காட்டி... ஆக்காட்டி... - நாட்டுப்புறப் பாடல்..!
பேராசிரியர் குணசேகரன்
இதன் உரிமையாளரின் அனுமதி இன்றி இப்படத்தில் பயன்படுத்த முற்பட்டதால், நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. அதனால் இப்பாடல், அப்படத்திலிருந்தே நீக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக அப்படப்பாடல்களைக் கொண்ட குறுந்தகடுகளில் அப்பாடல் இடம்பிடித்திருந்தது. அன்று கேட்ட பாடல் இது… இது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் அருமையான பாடல்….
பாடகரின் குரலில் சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் அப்படியே உங்கள் கண் முன்னே நிறுத்தும்…. நாட்டுப்புறப் பாட்டென்றால் இதல்லவா பாட்டு என உங்களைச் சொல்ல வைக்கும்…. கேட்டுப் பாருங்கள்…
நன்றி: புதுவை பல்கலைகழக பேராசிரியர் குண சேகரன்

Subscribe to:
Posts (Atom)