ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 18 March 2011

வீடு வரை உறவு..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி...' என்ற காலத்தால் அழிக்க முடியா தத்துவப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.

ஜூலை 14, 1962 -ல் வெளியான பாதகாணிக்கை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிது. இப்படத்தினை இயக்கியவர் கே. சங்கர். மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், கவியரசு கண்ணதாசனின் அமர வரிகளில், டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சிய மயமான குரலில் ஒலிக்கிறது இப்பாடல்.

இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் அண்ணனாக வரும் அசோகன் அவர்கள் ஒரு கால் இல்லாமல், இரு கை கட்டைகளை ஊன்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகும் போது பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும்... இப்பாடலின் வரிகளை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன..?

எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் டான் சமுசா அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த இந்த தத்துவப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


வீடு வரை உறவு...! | Online Karaoke
---------


Anonymous Don Samusa said...

எனக்கு பிடித்த பாடல் ஒன்று, அதன் வரிகள் எனக்கு நினைவில்லை...

அதில் அசோகன் அவர்கள் ஊனமுற்ற வேடத்தில் கடலை நோக்கி


சென்று கொண்டே பாடுவார்...

அந்த பாடலை எப்படியாவது அனுப்புங்கள்...
2 March 2011 14:15
--------------------------------

இனி சில சுவாரசியத் தகவல்கள்

@ பட்டினத்தாரின் பாடலிருந்து இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் உருவாக்கினார்.

மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வௌளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே

மற்றும்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக 
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே

இந்த இரண்டு பாடலும் பட்டினத்தார் எழுதியதே. இரு பாடலும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. 

இதன் பொருள் என்னவெனில், செல்வமும் உறவும் வருவது வீடுவரைதான். கதறி அழும் மனைவி வருவது வீதி வரைதான். அடித்துக் கொண்டு அழும் பிள்ளையின் விஜயம் சுடுகாடு மட்டும்தான். ஆனால் கடைசி வரை கூட வருவது செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான் என்றார் பட்டினத்தார்.



கண்ணதாசன் இதைத் தழுவி எழுதிய இப்பாடலில் கடைசி வரியான 'பாவமும் புண்ணியமும்தான் கடைசிவரை கூடவரும்' என்ற வாக்கியத்தை விட்டு விட்டார். இதைப்பற்றி நண்பர் ஒருவர் வினவியதற்கு கண்ணதாசன் சொன்ன பதில் “அப்படி ஓர் அருமையான வாக்கியத்தை சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு. அதனால் தான் அதைப் பாடலில் குறிப்பிடவில்லைஎன்றார். 

@ உலக நாயகன், பத்மஸ்ரீ கமலஹாசன் (குழந்தை நட்சத்திரமாக) நடித்த மூன்றாவது படம் இது.

@ இப்பாடலில் வரும் பெண் குரல் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலாகும். இவருடைய உண்மையான பெயர் எல். ராஜேஸ்வரி ஆகும்.

கோரஸ் பாடிக் கொண்டிருந்த இவரை முதன் முதலில் 'நல்ல இடத்து சம்பந்தம்' படத்தில் இவருக்கு 4 பாடல்களை கொடுத்து பாடகியாக்கினார்  அப்படத்தின் இசையமைப்பாளரான கே.வி. மகாதேவன்.

டைட்டிலில் பெயர் போடும் போது குழப்பம் வந்தது. ஏற்கனவே எம். ராஜேஸ்வரி என்ற பெயரில் ஒரு பாடகி இருந்ததால், இவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி என பெயர் மாற்றினார் இப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.பி.நாகராஜன்.




10 comments:

எஸ்.கே said...

தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_4203.html

மோகனன் said...

அந்தளவிற்கு நான் பெரியவனல்ல தோழரே...

இருப்பினும் எனை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி கேட்க வாங்க..!

எஸ்.கே said...

பெரியவர் சிறியவர் என்ன நண்பரே!
நாமெல்லாம் பதிவர்கள் அவ்வளவுதான்!:-)

பாடல்களை தொகுத்து அளிக்கும் உங்கள் தளம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதுவும் மற்றவர் விருப்பத்திற்கேற்ப பாடல்களை கஷ்டப்பட்டு தேடி அளிக்கிறீர்கள் மிக்க நன்றி! தங்கள் பணி பலரை சென்று சேர வேண்டும் என்றே வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினேன்.

தங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெறட்டும்.!

மோகனன் said...

பதிவர்கள் என்றாலும் இந்த பரந்த பதிவுலகில் அடியவன் ஒரு சிறுவனே என்கிறேன்...

தங்களின் வாழ்த்திற்கு எனது நன்றிகள்..!

Anonymous said...

காலத்தால் அழியா நல்ல பல பாடல்களை கொடுத்ததற்கு நன்றி. 1960- இல் வெளி வந்த "கைராசி" என்ற படத்தில் வரும் "அன்புள்ள அத்தான் வணக்கம். உங்கள் ஆயிழை கொண்டால் மயக்கம்" என்ற பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். முடிந்தால் கொடுத்து உதவவும்.

க. ச. குமார்

மோகனன் said...

வாங்க தோழா...

தாங்கள் அளித்த நன்றிக்கு என் பதில் நன்றி...

காத்திருங்கள் தேடி எடுத்துத் தருகிறேன்..!

யூர்கன் க்ருகியர் said...

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாக்கியங்கள் ??!!

யூர்கன் க்ருகியர் said...

ஒவ்வொரு வாகியதிற்கும் ஒவ்வொரு பீலிங் வருதே...

ச்சே என்னடா வாழ்கை இது நாராயணா? !!!!!

மோகனன் said...

வாங்க யூர்கன்...

அதுதான் பட்டினத்தார்... அவர் வழி வந்தவர்தான் நம் கவிஞர் கண்ணதாசனும்... பின் அர்த்தமில்லாமல் இருக்குமா..?

மோகனன் said...

வாழ்க்கையை பிறருக்காக வாழ்ந்து பழகு... வேறென்ன நான் சொல்ல யூர்கன்...

அடிக்கடி கேட்க வாங்க..!