'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...' என்ற பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 23-வது நினைவு தினமான இன்று... அவரது நினைவாக இப்பாடலை கனத்த இதயத்தோடு பதிவிலிடுகிறேன்...
நடேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம். நடேசன் அவர்களின் இயக்கத்தில் 19.10.1960 அன்று வெளியான மன்னாதி மன்னன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியே இப்பாடலாகத்தான் இருக்கும்... இப்பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது இப்படத்தின் டைட்டில்களும் வந்துவிடும்...
இப்படத்திற்கு பாடல்கள் மட்டுமல்ல கதைவசனத்தையும் கவியரசர் கண்ணதாசனே எழுதியிருக்கிறார்... (இப்படத்தின் சில பாடல்களை கவிஞர் மருதகாசியும் எழுதியிருக்கிறார்...) மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். டி.எம்.எஸ் அவர்கள் இப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்...
நமக்கென்று ஒரு வரலாறு உண்டு... வீரம் உண்டு... என்பதையும் திராவிடர்கள் எதற்கும் அஞ்சியதில்லை... இமயத்தையே அசைத்துப் பார்த்தவர்கள் என்ற பழங்கால சரித்திரத்தையும் இப்பாடலில் அழகாய்ப் புகுத்தியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்...
எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
8 comments:
பட்டைய கிளப்பும் பாட்டு ...
தலைவர் எம் ஜி ஆர் மற்றும் மதிப்பு மிகு வே.பிரபாகரன் அவர்களது அனுபவங்களையும் தொகுத்தது நன்றாயிருக்கிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி
ஒவ்வோரு தமிழ் உணர்வாளனுடைய உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டிய அற்புத பாடல். மூன்று அல்ல இரண்டு சரித்திரங்கள் வாழ்ந்து எமக்கு வழிகாட்டி மறைந்தார்கள். ஒரு சரித்திரம் எம்முடனே இன்னும் வாழ்கின்றது. அதை அழிக்க தமிழீழம் மலரும் வரை எந்த கொம்பனாலும் முடியாது.
வாங்க யூர்கன்...
எமது தளத்தின் பிராதான தளவிமர்சகர் நீர்...
உமது பாராட்டு... அரசவையில் அடிமட்டத் தொண்டனுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு ஒப்பானது...
நன்றி..
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் தோழரே...
தமிழீழம் மலரத்தான் போகிறது...
தமிழ்ச்சமுதாயம் தலை நிமிரத்தான் போகிறது...
நீங்கள் குறிப்பிட்ட மூன்றாவது சரித்திரம் மட்டுமல்ல இந்த மூன்று நட்சத்திர சரித்திரங்களும் என்றுமே மறையாது..!
தங்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே..!
realy super work bro.. keep it up...
Can you upload the song "Thoongum puliyai parai kondu yeluppuvom thooya thamizhrai thamizh kondu yeluppuvom" from puratchikaran flim..
மிக்க நன்றி கார்த்திக்...
நிறைய வேண்டுகோள்கள் உள்ளன... படிப்படியாகத்தான் நிறைவேற்ற வேண்டும்...
காத்திருங்கள்... பதிவிலிடுகிறேன்...
திரு மோகனன் அவர்களுக்கு
உங்கள் அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள். தமிழை நேசிக்கும் நீங்கள் முடிந்தவரையில் எழுத்துப் பிழைகளையும் தவிர்ப்பது வரவேற்கத்தக்கது.
//ஒரு முறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப் பாடல் எது என்று கேட்டபோது... அவரின் முகம் நிலவு போல் மலர்ந்தது... தனக்கு சரியாக பாட வராது என்று சொல்லி விட்டு, தன் சிம்மக் குரலில் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமில் திராவிடம் உடமையடா... ஆறிலும் சாவு... நூறிலும் சாவு... தாயகம் காப்பது கடமையாடா...' என பாடிக் காட்டினார்... (இந்த மாவீரர் தாயகத்தை காப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்து விட்டார்...//
அஞ்சாமில் என்பதை அஞ்சாமை என மாற்றிவிடுங்களேன்...
நன்றி தமிழன்பன்...
இனி எழுத்துப் பிழை நிகழாமல் கவனித்துப் பதிவிலிடுகிறேன்...
இப்போதே மாற்றி விட்டேன்.. நன்றி..!
Post a Comment